Saturday, September 7, 2013

Creative thoughts

சோம்பல் தருவது வறுமை முயற்சி தருவது வளமை
சோம்பல் என்பது அழிவு முயற்சி என்பது ஆக்கம்
சோம்பலில் விளைவது துன்பம் முயற்சியில் விளைவது இன்பம் 
சோம்பல் கொடுப்பது மயக்கம் முயற்சி கொடுப்பது மகிழ்ச்சி 
சோம்பல் ஓர் உட்பகை முயற்சி ஓர் ற்றநண்பன் 
சோம்பலால் கிடைப்பது இழப்பு முயற்சியால் கிடைப்பது உழைப்பு   
சோம்பல் உயர்வின் முற்றுப்புள்ளி முயற்சி எழுச்சியின் தொடக்கம் 
சோம்பல் வாழ்க்கையின் மரணம் முயற்சி வாழ்க்கையின் மறுபிறப்பு 
ஒரு சிறிய நெம்புகோல் ஒரு பெரிய பாறாங்கல்லை நகற்றி விடும் .அது போல ஒரு சின்ன முயற்சி ஒரு பெரிய தடையையும் அகற்றிவிடும். 
சோம்பல் வந்துவிட்டால் உண்மையான சுகம் ஓடிப் போய் விடும் .உண்மையான சுகம் என்பது ஓய்வெடுப்பதில்லை அப்படிப்பார்த்தால் ஒவ்வொருவருக்கும் மரணமே உண்மையான சுகம் என்றாகிவிடும் .

சோம்பல் வேறு ஓய்வு வேறு. உழைக்காமலும் முயலாமலும் சும்மா இருப்பது சோம்பல் .உழைப்பின் களைப்பைப் போக்க எடுப்பது ஓய்வு .

No comments:

Post a Comment