Wednesday, October 30, 2013

Creative thoughts

Creative thoughts
உலக மக்களின் இனிய வாழ்க்கைக்கு பொன் விதியொன்று உள்ளது .பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களோ
தையே நீங்களும் பிறருக்குச் செய்யவேண்டும்.இது எவ்வளவுக்கெவ்வளவு கூடுதலாகச் செய்கின்றீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சமுதாயம் வளம் பெறும்.நலமான சமுதாயமே வளமான தனிமனிதனின் வாழ்க்கை.

சேவை மனப்பான்மை உள்ள அரசியல்வாதிகளுக்குத் தங்கள் விருப்பங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உண்மையில் எவ்விதமான புறச்சூல்களும் உதவிகளும்தேவைப்படுவதில்லை. புறச் சூழலும் உதவியும் இருந்தால் மட்டுமே சேவை என்றால் அது சமுதாய நலம் தரும் சேவையாக இருக்கமுடியாது.

பதவி எதுவானாலும், சேவை செய்யும் மன்ப்பான்மை இல்லாவிட்டால் பதவிக்கும் கூட இழுக்கு
சேர்ந்து விடும். பட்டுச் சட்டை போட்டு உடல் முழுதும் சந்தனம் பூசியிருந்தாலும் விலக்கி வைக்கப்படும் தொழு நோயாளி போல மனதளவில் ஒதுக்கப்படுவார்கள்.
மறக்கமுடியாமல் ன்னிப்பது ன்னிப்பேயல்ல. பழியுணர்வை எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ள இது வழிவகுக்கும்..

மறக்க வேண்டும் என்பதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது வெவ்வேறு..மன்னித்து மறத்தல் என்பது பகை உணர்வை விட்டொழிப்பதற்குத்தான். எனினும் நம்மோடு தொடர்புடையவர்களிடம் தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருப்பது தவறல்ல.

No comments:

Post a Comment