Thursday, October 31, 2013

Philosophy

தத்துவம்
ஈர்ப்பில்லாவிட்டால் கட்டுப்பாடான வாழ்க்கை முறை அமைவதில்லை.இது உயிர்ப் பொருளாக இருந்தாலும் அல்லது உயிரற்ற பொருளாக இருந்தாலும் உண்மையாக இருக்கிறது
ஈர்ப்பு என்பது ஒன்றில் கொள்ளும் ஆர்வம்,டுபாடு,ஆசை,பற்று எனலாம்
ர்ப்பு தனிமையில் அல்லது  ஒருமையில் விளைவதில்லை. இருமையில் ஏற்படுகின்றது. மனிதன் எதையாவது விரும்புகின்றான் என்றால் அவன் விரும்புவதற்கு பொருளொன்று வேண்டும்.அந்தப் பொருளும் மனிதன் விருப்பப்படுமாறு இருக்கவேண்டும் அப்பொழுதான் மனிதனுக்கும் அந்தப் பொருளுக்கும் டையே ஒரு ஈர்ப்பு ஏற்படும். பன்மையில் இந்த ஈர்ப்பு ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்ளும் சமநிலையில் தான் எந்த அமைப்பும் அல்லது வளர்ச்சியும்  நிலைப்புத் தன்மையுடன் அமையமுடியும் என்பது இயற்க்கை விதி. சமநிலையற்ற அமைப்புகளில் கட்டுப்பாடான இயக்கமுறை இல்லாததால் ஒன்று அது சமநிலையை நோக்கி இயங்க வேண்டும் அல்லது சீரழிந்து போகவேண்டும். முன்னது வளர்ச்சியின் ஒரு கட்டம்,முன்னேற்றம்; பின்னது அழிவு பின்னேற்றம்..
பிரபஞ்ச வெளியில் விண்ணுறுப்புக்களெல்லாம் இந்த ஈர்ப்பினால் ஒரு சமநிலையைப் பெற்று காலமெல்லாம் நிலைத்திருக்கின்றன. அப்போது அவை ஒன்றோடொன்று பகைத்துக் கொண்டு மோதிக் கொள்வதில்லை ஒவ்வொன்றும் தங்களுடைய இயக்கத்திற்கு மற்றவை தோன்றி இருத்தலை அனுகூலமாக்கிக் கொள்கின்றன.

அதைப்போல ர்ப்பிற்கு இரண்டு வேண்டும் ஒன்று நீ  என்றால் மற்றொன்று எது என்பதை நீதான் தேர்வு செய்யவேண்டும். நீ  விரும்புவது மற்றவர்களாலும் விரும்பப்படுகின்றது என்றால் சமநிலையோடு ஒத்துப் போகத் தெரிந்திருக்க வேண்டும் .அப்போது நாம் மேற்கொள்ளும் முயற்சிகளே சமுதாயம் முனோக்கி நடை போடுகின்றதா அல்லது பின்னோக்கிப் போகின்றதா என்பதை தீர்மானம் செய்யும்

No comments:

Post a Comment