Sunday, January 10, 2021


கைக் கடிகாரம் பழுதடைந்து விட்டது என்றாலோ , கார் ரிப்பேர் என்றாலோ ,கழிவு நீர் குழாயில்  அடைப்பு என்றாலோ ,கட்டடத்தில் விரிசல் என்றாலோ .உடலில் நோய் என்றாலோ அவற்றைச் சரிசெய்யும் திறமை உள்ளவர்களிடம் காட்டி சரிசெய்து கொள்கின்றோம். அதை அவர்களைத் தவிர பிறரால் முழுமையாகச் சரிசெய்யமுடியாது . அது போலத்தான் ஊழல். இலஞ்சம். ஏமாறுபவருக்குத் தெரியாமல் ஏமாற்றுவது போன்ற குற்றங்களும் .இது சமுதாயத்தின் நலனைப் பாதிக்கும் ஒரு தொற்று நோய்  . தொற்று நோய்க் குற்றங்களைச் செய்பவர்களுக்குச் சாகாத சமுதாயத்தைப் புரிந்து  கொள்ளும் அக்கறையும் அறிவும்  இல்லை  .தொற்று நோயைத் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கும்  அவர்களைத் திருத்த வேண்டிய கடமை சமுதாயத்திற்கு உண்டு.  இந்த நோய்யைக் குணப்படுத்தி சமுதாய நலனை மீட்டுப் பெறுவது சாகாத சமுதாயத்தின் கடமை என்றாலும் அதைத் தொடங்கிச் செய்யவேண்டிய பொறுப்பு அதற்குத் தகுதியானவர்களே. ஆட்சியாளர்களுக்கு சமுதாய நலனைப் பாதுகாப்பதில் முழுப் பொறுப்பும் கடமையும் உண்டு. மக்கள் எல்லோரும் அவரவர் வேலைகளில் முன்னேற்றம் காண  வேலைகளில் கவனமாக இருக்கவேண்டும், பிற வேலைகளில் அக்கறை கொள்வதென்பது இரண்டாம் பட்சமே .தங்களுக்காகச் சாகாத சமுதாயசத்தின் நலனைக் கவனிக்க வேண்டும் என்று மக்களால் மக்களுக்காக நியமிக்கப்பட்ட அமைப்பே அரசாங்கம். மக்களை விட அரசாங்கத்திற்கே சமுதாய நலன் காப்பதில் அதிகப் பொறுப்பு உள்ளது  ஆனால்  ஆட்சியாளர்கள் தகுதியைத் தொலைத்துவிட்டதால்  பொறுப்பையும்  கடமையையும்  சரிவரச் செய்வதில்லை .அதனால் ஊழல் என்ற தொற்று நோய் ஒரு கொள்ளை நோய்போல சமுதாயத்தில் பரவிவருவதைத் தடுத்துக் கொள்ள  முடியாதிருக்கிறது.
அரசாங்கம் அதிக  அதிகாரம் கொண்டது. அதன் கட்டமைப்பு மூலம் சமுதாக் குற்றங்களைக் கட்டுப்படுத்திவிடமுடியும். காவல் துறையும் ,நீதித்  துறையும்  அப்பழுக்கில்லாது  தங்கள் கடமைகளை நேர்மையாகச் செய்தால் சமுதாயத்தில் குற்றம் பெருக வாய்ப்பில்லை. அதைக் கண்காணித்து ஒழுங்கு படுத்தவேண்டிய ஆட்சியாளர்கள் அதற்கு நேர் மாறாகத் தங்கள் செய்யும் குற்றங்களுக்கு அரசாங்கப் பாதுகாப்பாக மாற்றி அமைத்து வருகிறார்கள்..இதனால் தவறுகளைத் தொடர்ந்து செய்யும் மனத் தைரியம்  வலுவடைகிறது . மேலும் இவர்களைப் பார்த்தும் இவர்களுடைய பாதுகாப்புடனும்  மற்றவர்களும் குற்றச் செயல்களில் ஈடுபடும் போக்கும் தூண்டப்படுகிறது. அரசாங்கம் குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது. குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசாங்கம் நிலைப்படுமானால்  நாட்டின் முன்னேற்றம் பின்தங்கி சமுதாயம் சொல் லொன்னா கொடுமைகளுக்கு ஆளாகி        இயற்கையால் தீர்மானிக்கப்பட்ட நாட்களுக்கு வெகு முன்பே அழிந்து போகும்   

No comments:

Post a Comment