Saturday, January 9, 2021

ஊழல் என்றல் என்ன ?
 
பொதுச் சொத்தை, பொதுப் பணத்தை  யாருக்கும் தெரியாமல் தனதாக்கிக் கொள்வது. பொதுச் சொத்தும் ,பொதுப் பணமும் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்த ஊழல் இருக்கின்றது.அரசாங்கத்தின் கஜானா , கோயில் சொத்து , பொது நிறுவனங்கள் வங்கிகளில் மக்கள் சேமிப்பு ,மக்கள் நலத் திட்டங்களுக்காக  ஒதுக்கப்பட்ட நிதி  போன்றவை  ஊழல் செய்ய கண்ணை உறுத்தும் மூலங்களாக இருக்கின்றன  .இதில் அரசியல்வாதிகளும் , ஒரு சில தனி நபர்களும் ஆர்வம்  கொள்வதற்குக்  காரணம் அது யாருக்கும் உரிமையுள்ள பொருளாக இல்லாதிருப்பதால்  பெரும்பாலும் தனி மனிதர்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை ,  ஒருவர் தயக்கமின்றி ஊழல் ஈடுபடுவதற்கு மக்களின் இந்த மனநிலை அனுகூலமாக இருக்கின்றது. பொதுவாக  ஊழல்  செய்வதற்கு வாய்ப்பைத் தேடிக்கொண்டிருப்பவர்கள் பிரச்சனை செய்வார்கள்.இவர்கள் எழுப்பும் பிரச்னை  ஊழலில் ஒரு பங்கைத் தருவதற்குச் சம்மதிக்கும் வரை தொடர்கின்றது.. பிறகு அவர்கள் ஒரு கூட்டணியாகச் செயல்பட ஆரம்பித்து விடுகின்றார்கள். ஊழலும் பிற தொழில் போல விரிவுபடுத்தப்படுகின்றது  ,ஒரு சில  சமூக ஆர்வலர்கள் தட்டிக் கேட்பார்கள். இவர்கள் உண்மையான சமூக ஆர்வலர்களா இல்லையா என்பதை அவர்களுக்கும் ஊழல் செய்யும் வாய்ப்பைக் கொடுத்துப்பார்த்தால் தான் தெரியும்..ஏனெனில் இன்றைக்கு உள்நோக்கமின்றி, ஒரு உள்ளார்ந்த எதிர்ப்பார்ப்பின்றி சமூக சேவை செய்யக்கூடியவர்கள் யாருமில்லை.
.ஊழல் செய்வதற்கு தனி நபர்கள் முதலில் தங்கள் செல்வாக்கையும் மக்கள் நம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் முயற்சியில் சத்தமின்றிச் செயல்படுவார்கள். மக்களின் நம்பிக்கையில் இழப்பில்லாத வரை ஊழல் தொடர்ந்து செய்யப்படும் .  நம்பிக்கையை இழந்துவிட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க சிலர் அடியாட்களைக் கொண்டு எதிர்ப்பவர்களை மிரட்டிவருவார்கள். ஒரு சிலர் ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அரசாங்க அமைப்பின் துணையால் எதிர்ப்பை எதிர்கொள்வார்கள். எதிர்ப்பைச் சமாளிக்கும் முயற்சியில் பலவிமான குற்றங்கள் செய்யப்படுகின்றன. ஆட்சியாளர்களின் பின்னணி இருக்கும் போது இந்த குற்றங்கள் ஆதரமின்மையால் தண்டிக்கப்படுவதுமில்லை. ஊழல் சமுதாயத்தில் கொடுமையான குற்றங்களையும் அறிமுகப்படுத்தி வளர்த்துவிடுகின்றது . தண்டிக்கப்படாமல் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதால் குற்றங்களின் பரிணாம வளர்ச்சி மக்களை அச்சத்தின் எல்லைக்கே இட்டுச் செல்கின்றது. 
ஊழல் செய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. என்பதை அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்துள்ளனர்.. ஆட்சியாளருக்கு இருக்கும் வாய்ப்பு எதிர்கட்சியினருக்கு இல்லாததால் பொதுவாகத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவும். உண்மையில் மக்களுக்குச் சேவை  செய்வதற்கு இப்படி கடுமையான போட்டியும் தேவதையில்லை. பதவியும் தேவையில்லை. அரசின் நிதியைக் கொண்டு ஆட்சியாளர்கள் எந்தச் செலவு செய்யதாலும் அதில் திட்டத் செலவை அதிகமாகக் காட்டி ஊழல் செய்யும் பணத்தை மூடி மறைத்து விடுகின்றார்கள்..பெரும்பாலும் கட்டுமானப் பணிகளில் இது தவறாமல் நடைபெறுகின்றது.. இவர்கள் ஊழல் செய்வதால் திட்டத்தில் ஈடுபடும் பிறரும் அவர்கள் பங்கிற்கு ஊழல் செய்வார்கள். ஊழல் செய்தவர்கள் ஊழல் செய்கின்றவர்களைக் கேட்க முடியாமல் போவதால் பெரும்பாலும் செய்து முடிக்கப்படும் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை  . திட்டத் செலவை மேலும் மேலும் அதிகரித்து திட்டத்தை ஒருவழியாக முடித்தாலும் முழுமையாகப் பயன்தருவதில்லை.
ஆட்சியாளர்கள் பதவி ஏற்றவுடன் ஊழல் செய்வது மக்களுக்குத் தெரியாமலிருக்க வரி வருவாயை அதிகரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். .நிதி ஒதுக்கீடு பெறுவதற்குத் எதுவாக பல திட்டங்களை முன் மொழிவார்கள்..இவர்களுக்கு ஊழல் செய்ய அரசாங்கத்தின் பாதுக்காப்பு அம்சங்களை பலமாக்கிக்  கொள்கின்றார்கள்.. காவல் துறையும் நீதித்துறையும் ஆட்சியாளர்களின் பொறுப்பில் இருக்கும் வரை இந்த மறைமுகமான பாதுகாப்பு இருக்கவே செய்யும். .இது மக்களுக்கு ஒரு சட்டம் , அரசியல்வாதிகளுக்கு வேறொரு சட்டம் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்துவதால் , சட்டம் மற்றும் காவல் துறைகளின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சீர்கெட்டு வருகின்றது. இது பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழலை கணப்பொழுதில் உருவாக் கிவிடும்  அபாயத்தை  கொண்டுள்ளது  என்பதை ஒரு சிலரே புரிந்து வைத்திருக்கின்றார்கள்;
கோயில் சொத்து கொள்ளையயடிக்கப்பட கோயில் நிர்வாகிகள் போட்டி போடுகின்றார்கள். கடவுளுக்குச் சொந்தமான அசையும் மற்றும்  அசையா சொத்துக்களை கள்ளத்தனமாக தனதாக்கிக் கொண்டுவிடுகின்றார்கள்.உயிருள்ள மனிதனே ஒன்றும் கேட்கமுடியாத போது ,உயிரற்ற கற்சிலையான கடவுள் எப்படி க் கேட்பார் என்ற தைரியம்  ..இவர்கள் அடிக்கும் கொள்ளையைப் பார்த்து  கோயிலைப் சுற்றிப்பார்க்க வந்தவன் அங்குள்ள உண்டியலை உடைத்து உள்ளே உள்ள பணத்தை களவாண்டு செல்வது தப்பில்லை என்று நினைக்கின்றான் . குற்றம் குற்றங்களை வளர்க்கும் நிலையை இங்குமட்டுமல்ல எங்கும் பார்க்க  முடியும்.
வங்கிகளில் நடக்கும் மறைமுகமான ஊழல்களுக்கு அளவேயில்லை. வாடிக்கையாளர்களை அதிகரித்தும், புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தியும்  வருவாயை அதிகரித்துக் கொண்டாலும் செய்யும் ஊழலை மறைப்பதற்காக அபராதம், சேமிப்புக்கு வட்டி விகிதக் குறைப்பு, கடனுக்கு வட்டி விகித அதிகரிப்பு , கடமையின்றி சேவைக்கட்டணம் ,என்று   வாடிக்கையாளர்களிடமிருந்தே வசூல்  செய்வதை  வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் ..வாராக்  கடன் அரசியவாதிகளுக்கும் வங்கி மேலாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் மாதிரி. பினாமிகளுக்கு கொடுக்கப்படும் கடன் வாராக் கடனாகி இவர்களுடனையே ஐக்கியமாகி விடுகின்றது. கடன் கொடுத்து தள்ளுபடி செய்யும் போது  கடன் கொடுத்ததாக எழுதப்பட்ட  கணக்குகள் இவர்கள் மேற்கொள்ளும் ஊழலில் முக்கியப்பங்கு வகிக்கின்றது.. இதற்காகவே ஆட்சியர்கள்  நிதி ஒதுக்கீட்டை அதிகம் செய்வார்கள்.
அரசியல்வாதிகள் பெரிய பெரிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது அனுமதி வழங்குவதற்கு ஒரு பெரிய தொகையை இலஞ்சமாக வாங்கி கொண்டுவிடுகின்றார்கள். இது பெரும்பாலும் வர்த்தகம் முடியும் நிலையில் கூட  வெளியில் கசிவதில்லை .ஆட்சி மாற்றத்தின் போது மட்டுமே விஸ்வரூபம் எடுக்கின்றது. என்றாலும் மறைமுகச் சமரசங்களினால் அவை சிறிது காலத்திற்குளாகவே மறைந்து போகின்றன.

No comments:

Post a Comment