Monday, January 25, 2021

உலகில் எங்கோ ஒரு மூலையில் ,நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் போது , நம் தாய்நாட்டில் எப்படிக்  கிடைக்காமல் இருக்கின்றது ? எந்த நாட்டோடு ஒப்பிட்டாலும்  நம் நாட்டின் இயற்கை வளம் ஒன்றும் குறைந்ததில்லை..  ஏன் நம்நாடு நம் இளைஞர்களின்  திறமைகளை முறையாக இனமறிந்து மதிப்பிட்டு திட்டமிட்டு பயன்படுத்தாமல் வீணடிக்கின்றது ? ஒவ்வொரு திறமையானவர்களுக்கும் வேலை கொடுப்பதால் அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கின்றது என்பதற்காக இலஞ்சம் கொடுக்கின்றார்கள் .இதனால் 
இலஞ்சம் கொடுக்க முடியாத திறமையானவர்களின் திறமைகளை இழப்பதுடன் இலஞ்சம் கொடுக்கும் திறமையற்றவர்களுக்கே வேலை கொடுக்கும் நிலை ஏற்படுகின்றது .இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கிக் கொள்ளும் திறமையானவர்கள் கூட இலஞ்சம் கொடுத்ததால் ஏற்படும் மனநிலைப்பாதிப்பால் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. மேலும் தவறுகள் செய்யவும் துணிவு கொள்கின்றார்கள். திறமையற்றவர்கள் வேலையும் செய்வதில்லை , கொடுத்த இலஞ்சத்தை ஈடுகட்ட அதிக இலஞ்சம் கேட்கின்றார்கள் . திறமையும் நேர்மையும் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலைதேடிச் சென்றுவிடுகிறார்கள்  உண்மையில் நம்முடைய இளைஞர்களின் திறமைகளை மிச்சி சரியாக மதிப்பிடுவதும் பயன்படுத்திக் கொள்வதும் பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளே.
தாய் நாட்டிலேயே கிடைக்கும் திறமையானவர்களை புறக்கணிப்பதும் ,திறமையற்றோரைப் பணியில் அமர்த்துவதும் ஆள்பவர்கள் நாட்டுக்குச் செய்யும் தீங்காகும் .அரசாங்க வேலைகளை விற்கும் போக்கை ஆள்பவர்கள் கைவிடவேண்டும் .அரசாங்க பணி நியமனங்களை நீதித்துறை, கல்வித் துறை, மிதித்த துறை சார்ந்த குழுவே தீர்மானிக்கவேண்டும் .அப்பொழுதுதான் சட்டத்திற்குப் புறம்பான நியமனங்கள் ஓரளவாவது தடுக்கப்படும் .
உண்மையில் வேலைவாய்ப்பு எங்கும் கொட்டிக்கிடக்கிறது ஆனால் அரசாங்கம் அவற்றைச் சுட்டிக்காட்டி வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதில்லை .இந்திய மக்களில் பெரும்பாலானோர் வாழ்வாதாரத்தைப் பெறத்  தங்கள் வேலைகளைத் தாங்களே தேடிக்கொள்கின்றார்கள் .ஆனால்  அவர்கள் பொருள் சம்பாதிக்கும் போது  அரசாங்கம் ஏதோ உதவிசெய்துவிட்டது போல வரி விதிப்பை மட்டும் தவறாமல் செய்துவிடுகிறது .வரிவிதிப்புக்கு எவ்வளவு உரிமை அரசாங்கத்திற்கு உள்ளதோ அதைவிட அதிகமான உரிமை வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதிலும் இருக்கின்றது .இதை மக்களும் மக்கள் அரசாங்கமும் நன்கு உணர்ந்து கொண்டு நடக்கவேண்டும். மக்கள் ஆட்சியில் மக்கள் தான் முதலாளிகள் அரசியல்வாதிகள் அனைவரும் தொழிலாளிகள்தான் . ஆனால் உலகெங்கும் முதலாளி -தொழிலாளி நிலைகள் இடம்மாறி வருகின்றன.
ஒரு நல்ல அரசாங்கம் தன் செலவுகளை முழுதும் வரி விதிப்பிலேயே செய்யக்கூடாது. அதனிடமுள்ள உயர்ந்த நிதிநிலைக்கு  பெரிய பெரிய திட்டங்களை மேற்கொள்ளமுடியும். நாட்டிலுள்ள வளங்களையும் ,மூலப்பொருட்களையும்  செலவின்றிப் பெறமுடியும். அரசின் வருவாய்க்கு வரி வேறு இல்லை. இந்தநிலையில் அரசு நிறுவனங்களின் லாபம் அதிகமாக இருக்கவேண்டும்..ஆனால் பெரும்பாலான அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் நடக்கின்றன. .அரசின் இலாபம் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் இலாபமாகிவிடுவதால் தனி நபர்களின் பொருளாதாம் மேம்பட்டாலும் நாட்டின் பொருளாதாம் மேம்படுவதில்லை .
அரசாங்கம் இலாபம் தரும் பல தொழில்களை மேற்கொள்ளும்போது அரசியின் வருவாயைப்  பெருக்கிக்கொள்ள முடியும் .அதனால் வரி விதிப்பை குறைக்க மக்களின் உரிமையுள்ள பொருளாதாரத்தை உயர்த்த முடிகின்றது. விலைவாசி ஏற்றத்தை மட்டுப்படுத்த முடிகின்றது .

No comments:

Post a Comment