Friday, January 22, 2021

 மக்களுக்கு மக்களே கெடுதல் செய்கின்றார்கள். காவலர்களில் காவலர்களே குற்றவாளிகளுக்கு உளவாளிகளாக இருப்பதும் , இராணுவத்தில் இராணுவத்தினரே எதிரிகளுக்கு உளவு செய்வதும் மக்கள் மனநிலையின் கட்டுப்பாடற்ற  பரிணாம வளர்ச்சியின் தொற்றே .மக்கள் ஏன் அப்படி நடந்து கொள்கின்றார்கள் .ஒருவருக்கு நம்பிக்கைதரக்கூடிய முன் உதாரணமின்றி குற்றங்கள் செய்யும் தைரியம் வருவதில்லை. அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள் , அதிகாரிகளுக்கு இலஞ்சம் வாங்கும் தைரியத்தைக்  கொடுக்கின்றது.அதிகாரிகள் வாங்கும் இலஞ்சம் வர்த்தர்களுக்கு மக்களை ஏமாற்றும்  தைரியத்தைக் கொடுக்கின்றது அதிகாரிகளிடம் கொடுக்கும் இலஞ்சத்தாலும் ,  வர்த்தகர்களிடம்  ஏமாந்து பெறும் இழப்புக்களினாலும் மக்களுக்கு தவறுகள் செய்யும் மனநிலையைவளர்த்துக் கொண்டு விடுகின்றார்கள் .மக்கள் ஏமாந்து போவதால்  தவறு செய்கின்றார்கள் ஆனால் வர்த்தகர்களும்,அதிகாரிகளும் ,அரசியல்வாதிகளும் ஏமாற்றுவதற்காகவே தவறு செய்கின்றார்கள்.மக்களுக்குத்  தவறு செய்ய அதிகம் வாய்ப்புக் கிடைப்பதில்லை . ஆனால் வர்த்தகர்களுக்கும் ,அதிகாரிகளுக்கும் , அரசியல்வாதிகளுக்கும்  இந்த வாய்ப்புக்கள் கூடுதல் முயற்சிகளின்றி இயல்பாகவே அமைந்துவிடுகின்றது. அந்த வாய்ப்புக்களைத் தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக பதவிக்காகவே போராடுகின்றார்கள். இலஞ்சம் கொடுத்து பதவிக்கான நியமன ஆணையைப் பெறுகின்றார்கள். நாடு இவர்களால் சுரண்டப்பட்டுக் கொண்டே இருப்பதால் , எந்த முயற்சியும் முன்னேற்றத்தை கண்ணில் காட்டுவதில்லை . சிறு சிறு துளிகள் ஒன்று சேர்ந்தால் ஆற்றில் வெள்ளமாகின்றது .அதுபோல மக்களை ஒன்று திரட்டி நேர்மையற்ற அரசுக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கிவிடமுடியும்.ஆனால் நேர்மையின்மைக்கு எதிராக ஒரு கூட்டணியை உண்டாக்க முடிவதில்லை. .மக்கள் இயக்கமாக இருந்தால் மட்டுமே அந்த முயற்சியில் ஓரளவாது வெற்றி காணமுடியும் .அதற்கு ஆளுமைத் திறன்மிக்க , தைரியமான தலைமை தேவை. 

வாழ்வாதாரம் இல்லாதபோது மாற்று முயற்சிகளை மேற்கொள்கிறான். எதுவும் பயனளிக்காதபோது உயிர் வாழத்  தவறு செய்யும் நிலைக்குத்  தள்ளப்படுகிறான்.திருடத் தைரியமில்லாதவன் பிச்சை எடுக்கிறான். அவர்களிடத்தில் நேர்மை இன்னும் மறையாமல் இருக்கின்றது .இவர்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுத்து  பிச்சை எடுப்போரை ,வேலையின்றி த் தவிப்போரை மட்டுப்படுத்த வேண்டும் .ஏனெனில் பிச்சை எடுக்க வெட் கப்படுகின்றவன் திருடுவதற்குத் தயங்குவதில்லை .இரண்டையும் சேர்த்துச் செய்ய நினைப்பவர்கள் இலஞ்சம் ,ஊழல் போன்ற குற்றச் செயல்களைச் செய்கின்றார்கள் . 

குற்றவாளிகளுக்குத் தெரிந்தே உதவுபவன் காலப்போக்கில்  குற்றவாளியாகி விடுகின்றான். குற்றவாளியாகி குற்றவாளிக்கு உதவி செய்தவன் குற்றவாளியாலேயே பாதிப்பிற்கு உள்ளாகிறான் .குற்றவாளியால் நேர்மையாகச் செயல்பட முடியாததால் , உண்மை பேசமுடியாததால் .அவன் தன் பிள்ளைகளை அவனால் நன்மக்களாக வளர்க்க முடியாமல்,,நாட்டுக்கு நல்ல குடிமக்களைக் கொடுக்க முடியாமல் போகின்றது.   


No comments:

Post a Comment