Monday, January 25, 2021

ஆனால் வழக்கம்போல கண்காணிப்பு இல்லாமல் அரசு நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்திலேயே நடக்கின்றன..மக்களின் நன்மதிப்பைப்  பெறவேண்டிய சூழ்நிலைகளில்  இலாபம் வந்ததாகக் கூறுவார்கள்.உண்மையில் இலாபம் இருந்தால் நிறுவனங்கள் மேலும் மேலும் விரிவடைந்திருக்கும்.பல புதிய கிளைகளுடன் பல புதிய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தியிருக்கும் எங்கும் விற்பனை நிலையங்களை ஏற்படுத்தி வேலைவாய்ப்புக்களை உருவாக்கியிருக்கும் . மேலும் நியாயமான விலையில் தரமான பொருட்களை மக்களுக்கு நிரந்தரமாக  வழங்கவும் முடிகின்றது .இதனால் நமக்கு வேண்டிய  வேலை வாய்ப்புக்களை நாமே உருவாக்கிக் கொள்ளமுடியும் .ஆனால் இன்றைய அரசாங்கம் தொழிலார்களின் பிரச்சனைகளைத் தீர்வு செய்யமுடியாமல் அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதில் விரும்புகின்றது..எந்த நோக்கத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டதோ அதே நோக்கத்தின் போக்கிலேயே அதன் வளர்ச்சி விரிவடையாதது நோக்கத்தின் பயனை அனுபவிக்கமுடியாமல் செய்துவிடுகிறது.அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்போது விலைவாசி ஏற்றம் தவிர்க்கயியலாததாக இருக்கின்றது தொழிலாளர்கள் குறைப்பு நடவடிக்கை வேலையில்லாதோரின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது .
நமக்கு வேண்டிய வேலை வாய்ப்புக்களை வெளி நாட்டினர் இங்கே  தொழில் தொடங்குவதால் மட்டுமே முடியும் என்று இருக்காமல் நம் தேவைகள், வாய்ப்புக்கள் இவற்றை முன்னறிந்து தொழில் தொடங்கவேண்டும். எல்லா வசதிகளையும் வாய்ப்புக்களையும்  தேடாமல் பெறவல்ல அரசாங்கமே தொழில் தொடங்காவிட்டால் எல்லாவற்றையும் முனைந்து பெறவேண்டிய தொழில் முனைவோரால் தொழில் தொடங்கவே முடியாது .
ஒருவர் வாழ்வதற்காக ஒரு வேலை செய்து பொருள் சம்பாதிக்கிறார் .சம்பாத்தியம் அன்றைக்கு அவருடைய வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ளப்  போதுமானதாக இருக்கின்றது ..இன்னும் கூடுதல் வசதியுடன் வாழ அவருக்குக் கூடுதல் சம்பாத்தியம் தேவைப்படுகின்றது .எதிர்காலத் தேவைக்காகச் சிலர் சேமித்து வைக்க விரும்புவார்கள் அதற்காகச்   சிலர் வேறொரு வேலை செய்து சம்பாதிப்பார்கள் . இதற்கு அடிப்படையான உளவியல் நமக்கு சில வாழ்வியல் உண்மைகளைத் தெரிவிக்கின்றது.எதிர்காலம் எப்படியிருக்கும் என்று யாருமே சரியாக மதிப்பிடத் தெரிவதில்லை  எதிர்காலம் மிகவும் கஷ்டமாக இருக்கும் என்றும் அதனால்  தேவைகள் எதிர்காலத்தில் அதிகமாயிருக்கும் என்றும் நினைப்பதால் பெரும்பாலான மக்கள்  கூடுதல் சம்பாத்தியம், கூடுதல்  சேமிப்பில் விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் ஆனால்   இரண்டு வேலை செய்ய நேரம் கிடைப்பதில்லை .பெரும்பாலானோருக்கு உடல் ஒத்துழைப்புக் கொடுப்பதுமில்லை  . அதனால் கூடுதல் வேலை செய்யாமலேயே கூடுதல் சம்பாத்தியம் பெறும் வழிமுறைகளிலேயே மக்கள்  நாட்டம் கொள்கின்றார்கள் .பெரும்பாலும் இந்த வழிமுறைகள் நேர்மையானதாக இருப்பதில்லை .ஒரு முதலாளியே பல தொழில் புரிவதும் ,அரசியல்வாதிகளே  தொழில் அதிபர்களாக இருப்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேர்மையற்ற வழிமுறைகளாக இருக்கின்றன இவர்கள் கூடுதல் சம்பாத்தியத்தையும் ,தவறான வழியில் ஈட்டிய பொருளையும் முடக்கி வைக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றார்கள். மேலும் தவறான வழியில் ஈட்டிய பொருளுக்கு பின்னாளில் கணக்குக் காண்பிக்க இது பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது

No comments:

Post a Comment