Monday, January 4, 2021

ஊழலற்ற சமுதாயம் –3

 

 

இலஞ்சத்தை நம்பி அகலக்கால் வைத்ததால் கடன் அதிகரிக்கின்றது ,.ஒரு வழியில் கை நிறையக் காசு வந்தாலும் மறுவழியில் அதே வேகத்தில் செலவாகி பொருள் பற்றாக்குறை நீடித்கின்றது . குற்றம்  செய்யும் போது தீயவர்களே கூட்டாளிகளாக வருகின்றார்கள்.  கூட்டாளிகளையும் கவனிக்க வேண்டியிருப்பதால் வரவில் ஒரு பகுதியை அவர்களுக்காகச் செலவழிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது என்றைக்காவது ஒரு நாள் அவர்கள் கையில் ஒரு வலுவான ஆதாரம் சிக்கிவிட்டால் அந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டே பயமுறுத்தி தொடர்ந்து பணம் பறிப்பார்கள் . அதற்காகவே தீய பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுப்பார்கள்.  தீய வழியில் வரும் பணம் தீயவழியிலேயே போகும் என்ற ஆன்றோர் வாக்கை  மெய்ப்பிக்கும்  ஒரு சான்றாகத் திகழ்வார்கள். அடுத்தடுத்து வரும் பிரச்சனைகளைச்  சமாளிக்க வேண்டியிருப்பதால்  குடும்பத்தில் கொண்டுள்ள அக்கறை குறைய குடும்ப நலன் பாதிக்கப்படும், என் நண்பருடைய வாழ்க்கையும் இப்படித்தான் சீரழிந்து போனது. என்றைக்கு இலஞ்சம் வாங்கும் பழக்கத்திற்கு அடிமையானரோ அன்றைய தினத்திலிருந்து என் நண்பருடைய  வாழ்க்கை படிப்படியாக சீரழிந்து போனது . குடும்பம் மகிழ்ச்சியை இழந்து ஒவ்வொருநாளும் ஒரு ஆபத்தை எதிர்நோக்கி கவலைப்பட்டுக்கொண்டிருந்தது. இன்றைக்கு போலீஸ் விசாரணை நீதிமன்றம்  எனத் தினமும் அலைந்து கொண்டிருக்கின்றார் .  உறவினர்கள் மற்றும் சொந்தங்களின் பேச்சும் முறிவும் வாழ்க்கையின் மீதே ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது . ஒரு கட்டத்தில் அவர் தற்கொலைக்குக் கூட முயற்சித்து தோற்றுப்போயிருக்கின்றார்., 

 

எண்ணங்களுக்கு ஏற்ப வசப்படாத வசதிகளைப் பெருக்கிக் கொள்வதை விட  வசப்படும் வசதிகளுக்கு ஏற்ப எண்ணங்களுக்கு ஒரு வரம்பை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. என்ற பொன்மொழிக்கு என் நண்பருடைய  வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. குடும்பத்தின் மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாகத் தொலைத்துவிட  இந்த இலஞ்சம் ஒரு காரணமாக இருக்கின்றது என்பதை பாதிப்பு கடுமையாக இருக்கும் போதும் கூட ஊழல் புரிவோர் உணர்வதேயில்லை.

No comments:

Post a Comment