Thursday, January 14, 2021

 .பல வேலைகளைச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது ஒரு குழுவில் இருப்பவர் மிக எளிதான வேலையைத் தேர்ந்தெடுப்பார்..பயணத்தை மேற்கொள்ளும் போது எல்லோரும் குறுக்குப் பாதை அல்லது வேகத் தடைகள் இல்லாத பாதைகளில்  செல்வார்கள் .இதை மனிதர்கள்  மட்டுமல்ல இயற்கையும் கூட அப்படித்தான் விரும்புகின்றது..இரு புள்ளிகளுக்கிடையே ஒளி எப்போதும் சிறுமத் தொலைவைக் கடந்தே பரவுகின்றது .நீர் வழிந்தோடும் போது எதிர்ப்புக் குறைந்த பாதையையே தேடுகின்றது. அலைபாயும் மனித மனமும் கூட இதற்கு விதிவிலக்கில்லை..எதிர்ப்புக் குறைந்திருந்தால் மனிதர்களிடம்  நேர்மை குறைந்து போகின்றது .குறைந்த எதிர்ப்புக்களைக் கொண்ட பாதையில் மனிதர்கள்  நேரமையைக் கடைபிடிக்கத் தவறிவிடுகிறார்கள் .வீட்டில் பெற்றோர்களின் எதிர்ப்பு இருப்பதால் பிள்ளைகள் ஒழுக்கத்தோடு வளர்கின்றன .பள்ளியில் ஆசிரியரின் எதிர்ப்பு இருப்பதால் மாணவர்கள் புரிதலோடு  கற்றுக்கொள்வதுடன் தவறு செய்யவும் அச்சப்படுகின்றார்கள் .அதுபோல நாட்டில் சமுதாய எதிர்ப்பு இல்லையென்றால் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் நேர்மையைத் துறந்து விடுவார்கள் தீய செயல்களும் ,எதிர்ப்பும் வினை- எதிர்வினைச் செயல்கள்.எதிர்வினை இல்லாவிட்டால் வினையின் வீச்சு அதிகமாகவே இருக்கும் 

ஊழல் புரிந்தவன் அச்சப்படவில்லை  தொடர்ந்து ஊழலைச் செய்து கொண்டே இருக்கின்றான். ஊழலுக்கு எதிராகப் போராட நினைக்கிறவன் என்ன செய்வதென்று புரியாமல் பரிதவிக்கின்றான் .பொருளைத் திருடியவன் கவலையின்றி மகிழ்ச்சியாக இருக்கின்றான்  பொருளை இழந்தவன் மேலும் பொருளை இழந்து மீட்டுப் பெறமுடியாமல் துன்பப் படுகின்றான் .இந்நிலை நிலைக்கும் போது சமுதாயத்தில் குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன .பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் விரிவடைகின்றன . ஓர் உண்மையான அரசாங்கம் நல்ல திட்டங்களைச்  செயல்படுத்துவதற்கு முன்னர் சமுதாய முன்னேற்றத்திற்குத் தடையாகவுள்ள போக்குகளை அகற்றவேண்டும்  இல்லாவிட்டால் ஓட்டைச் சட்டியில் தண்ணீர் மோந்து விவசாயம் பண்ணும் கதையாகிவிடும்          

 நீதியை நிலை நாட்டுவதற்கு ஒருவர் அநீதியால் இழந்ததைவிடப் பல மடங்கு செலவு செய்ய வேண்டிய நிலையே நீடித்திருப்பதால்  பல அநீதிகள் வெளித்தெரியாமலேயே இருக்கின்றன.சமுதாயம் மெள்ள மெள்ளச்  சீரழிந்து வருவதற்கு மக்களிடம் இருக்கும் இந்த எண்ணமும் ஒரு காரணமாகும் 

மி சூரியனை ஒரு வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது .ஒரு நாளில்லை  ஒரு மாதமில்லை ,ஒரு ஆண்டு இல்லை கோடிக் கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கின்றது .ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு காலமெல்லாம் இயங்கி வருவதால் பூமிக்கு இது இயலுவதாகின்றது. தன் இயக்கப் பாதையை விட்டு விலகி  வேறுபாதையில் சென்றால் பூமிக்கு அழிவு காலம் ஆரம்பம் என்று சொல்லாம்..அது போல சூரியக் குடும்பம் போன்ற சமுதாய வாழ்க்கையில்  கோள்கள்  போன்ற தனி மனிதர்கள் ஒரு காட்டுப்பாட்டிற்கு  உட்பட்டே வாழ வேண்டும் என்பது இயற்கையின் நியதி .கட்டுப்பாடில்லாத வாழ்க்கை நூலறுந்த பட்டம் போல,        

முதாய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்வதென்பது உலக சுகங்களை ஒன்றுவிடாமல் அனுபவிக்கத் தேவையான பொருளை ஈட்டுதல் என்றுதான் நினைக்கின்றார்கள் .ஆனால் எவ்வளவு விரும்புகிறார்களோ அவ்வளவு முயற்சியில் ஈடுபடுவதில்லை..அதற்காகத் தன் விருப்பங்களை விட்டுவிடவும் மாட்டார்கள். எல்லாம் தானாக தனக்குக் கிடைக்க வேண்டும் என்று முயற்சியில் நம்பிக்கையிழந்த ஒரு சிலரும் .குறுக்கு வழியில் நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புத் தேடும் பலரும் முயல்வார்கள் .சமுதாயத்தின் சராசரி நிலையிலிருந்து விலகி வாழவேண்டும் என்றே ஆசைப்படுவார்கள் .

நல்லவைகளை விட தீயவைகளே அதிகம் மனதில்  தாக்கத்தை ஏற்படுத்துகின்றன .நல்ல அறிவுரைகளை விடத்  தீய அறிவுரைகளே மனதில் எளிதில் இடம் பிடித்துவிடுகின்றன. ,நல்ல பக்கவழக்கங்களை விடத்  தீய பழக்கவழக்கங்களையே மனம் இயல்பாக நாடுகின்றது .வாழ்க்கையின் தரம் மேலும் மேலும் குறைந்து போவதற்கு சமுதாய மக்களின் மனநிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களே .அடிப்படைக் காரணமாக இருக்கின்றது என்பதை நாம் இன்னும் புரிந்து கொள்ளவேயில்லை. பேச்சளவிலான திருத்தங்களும் . நீதியைப் பின்பற்றாத  சட்டங்களும் திருத்தப்படாத சமுதாயம் வளர்ச்சிபெறவே வழிவகுக்கின்றன. திருத்தப்படாத சமுதாயம் , மனித சமுதாயத்திற்கு  உள்ளெதிரியாகிவிடும். எதிர்களில் மிகவும் ஆபத்தான எதிரி உள்ளெதிரியே ஏனெனில் உள்ளெதிரி எப்போதும் அருகிலிருப்பதுடன் ,உடன் இனமறிந்து கொள்ளவும் முடியாது ..

ஊழலை இந்தியாவில் ஒழிக்க முடியாது. ஏனெனில் அதை நாம் நெடுங்காலமாக வளர விட்டுவிட்டு ஏற்றுக்கொண்டுவிட்டோம். ஆட்சியாளர்களுக்கு கூடுதல் வருவாய் , வழிதெரியாத மக்களுக்கு காரியம் ஆனாச் சரி என்ற எண்ணம் இரண்டும் சேர்ந்து ஊழல் ஒன்றும் தப்பில்லை என்ற  எண்ணத்தையே நிலைப்படுத்தியிருக்கின்றது.வாங்குவோர் ,கொடுப்போரைக் கொடுக்க வைக்க சட்டத்திற்குத் தெரியாத பல வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் ம்,தாமதம் செய்யச் செய்ய லஞ்சத்தை மறுப்புபவனும் இலஞ்சம் கொடுத்து காரியத்தை முடிக்கத்  தயங்குவதில்லை. தாமதப்படுத்துதல்  இலஞ்சம் வெங்காயருக்கு ஒரு வலுவான ஆயுதமாக இருக்கின்றது. 

களையெடுக்காமல்  பயிர் விளைச்சலில் சாதனை படிக்க நினைக்கின்றோம்  

குற்றவாளிகளைப்  பிடித்து  தண்டனை வாங்கிக்  கொடுப்பதை  விட குற்றவாளிகள் கொள்ளையிட்ட பொருட்களை ப் பறிமுதல் செய்து அதை யாருக்கும் தெரியாமல் பங்கு போட்டுக் கொள்வதிலேயே காவலர்களும்,உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அதிக அக்கறை காட்டிவருகின்றார்கள்.


No comments:

Post a Comment