Tuesday, January 19, 2021

 ஏமாறுபவர்களுக்குத் தெரியாமல் ஏமாற்றுவது இன்றைக்கு மக்களிடையேமிகுந்து வருகின்றது. எனினும் இதில் அதிகம் பங்கேற்பவர்கள் வியாபாரிகளும் வர்த்தகர்களும்தான் . பொருள் அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்ற பேராசையில் விற்கும் பொருளைக் குறைவாக அளவிட்டு விற்பார்கள்.இது கூடப் பரவாயில்லை . கலப்படம் செய்தும், போலியாகப் பொருளை உற்பத்திசெய்தும்  விற்பதுதான் மிகுந்த ஆபத்தானது .மக்களைக் கவருவதற்காக, வண்ணப் பைகளில் அடைத்தும்  இலவசங்களைத் தந்தும் விளம்பரம் செய்வார்கள் கலப்பட உணவுப்பொருட்கள் உடல் நலக் குறைபாடுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாகின்றது .இவை உடலில் உள்ள இயற்கையான பாதுகாப்பு அம்சங்களைப் பாதித்து  கட்டுப்படுத்த முடியாத புதிய புதிய நோய்களை உண்டாக்குகின்றது.இந்தியாவில் புற்றுநோய் அதிகம் இருப்பதற்கு கலப்பட உணவு ஒரு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்  கலப்பட உணவால்  உழைக்கும் மனிதர்களுடைய செயல்திறன் குறைகின்றது. மாணவர்கள் உரிமையுள்ள கல்வியைப் பெறுவதில் குறைபாடு ஏற்படுகின்றது .உழைப்போரின் உழைப்பும், உழைக்க வருவோரின் அறிவும் குறைந்து போவதால் நாட்டின் வளர்ச்சி  மட்டுப் படுத்தப்படுகின்றது .ஒரு செயலின் தாக்கம் மறைமுகமாக பல செயல்களில் ஏற்படும் என்பதை  அறிந்து முன் நடவடிக்கை மூலம் தவிர்க்கவேண்டியதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சிலர் பொருளை அதிக விலைக்கு விற்பார்கள்.வேறு கடைகள் இல்லாத சூழ்நிலைகளில், திருவிழாக்கள்,பொருட்காட்சி  ,திரையரங்குகள் போன்றவிடங்களில் ருள் வாங்கும் கூட்டம் அதிகமாக இருக்கும் போதும் . சொன்ன விலைக்கே பொருளை வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். 

ஒரு வகையினர் பயனாளிகள் அல்லது பொருளின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய பொருளில்  சிலவற்றைக் களவாண்டு விடுவார்கள் ..பொதுவாகப் கார் ,கணிப்பொறி போன்ற வற்றை பழுதுநீக்க பணிமணிகளில் கொடுத்தால் ஒரு சிலர் அதிலுள்ள ஒரு சில நல்ல பொருட்களை களவாண்டு கொள்கின்றார்கள்..எக்ஸ்சேஞ்  முறையில் பழைய கார்களை வாங்கி புதிய கார்களை விற்பவர்கள் .களவாண்ட  உறுப்புக்களை ப் பயன்படுத்தி புதுப்பித்து நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றார்கள் ..புதிய பொருட்களை  விற்பவர்கள் அதன்  பழைய பொருளையும்  விற்கும் அனுமதியுள்ளவர்களாக இருக்கக்கூடாது .         

எழுத்தறிவின்மையையால் பல ஏழைமக்கள் ஏமாறுபவர்களாக இருக்கின்றார்கள். இவர்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி பலர் அவர்களை ஏமாற்றுகின்றார்கள்.. 

No comments:

Post a Comment