Saturday, January 23, 2021

 உற்பத்திப் பொருட்கள் புதுமையானதாகவும் கூடுதல் பயன்தரக்கூடியதாகவும் இருப்பதுடன் தரமானதாகவும் இருக்க வேண்டும் .அப்பொழுதுதான் வர்த்தகத்தை உலக அளவில் பெருக்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் .இது நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக மேம்படுத்திவிடுவதுடன் , புதிய புதிய வாய்ப்புக்களின் மூலம் மக்கள் அனைவரையுமே தொழித்துறையில்  ஈடுபாடு  கொள்ளுமாறு தூண்டி அதன் தொடர்ச்சியைக் கூடுதல்  முயற்சிகளின்றி இயல்பாக வடிவமைத்து விடுகின்றது. கூடுதல் வருவாய் என்பது போலியான பொருள் உற்பத்தியாலின்றி ,கூடுதல் விற்பனையின்  மூலம்  பெறமுடிவதால் வளர்ச்சியுடன் கூடிய நிலையான வர்த்தகத்தை உருவாக்கிக் கொள்ளமுடிகிறது . உற்பத்திப் பொருட்கள் தரமானதாகவும் ,மக்கள் நலனுக்குத் தீங்கிழைக்காததாகவும் இருக்கவேண்டும்.  உற்பத்தியாளர்கள் இந்தக்  கட்டுப்பாட்டிற்கு  உட்பட்டு  பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதை  அரசாங்கத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். இவ்வதிகாரிகள் நேர்மையாகச் செயல்படுகின்றார்களா என்பதை அரசாங்கத்தின் அமைச்சகம் கண்காணிக்கவேண்டும். மக்களுக்காக  அதிகாரிகளும் ,அரசாங்க அமைப்புகளுமே  அதிகம் கண்காணிக்கப்படவேண்டும். ,     உற்பத்திப் பொருட்கள் தொடர்ந்து தரமானதாக இருக்க தொழிலாளர்களும்  அர்ப்பணிப்புடன் நேர்மையாகச்  செயல்படவேண்டும். இதற்கு தொழில் அதிபர்கள் தொழிலாளர்களுடைய நலனை மட்டுமின்றி அவர்களுடைய குடும்ப நலனையும் ஒரு வரம்பிற்கு உட்பட்டு கவனிக்கவேண்டும், வீட்டு வசதி , போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி , சலுகை விலையில் உணவுப் பொருட்கள் மற்றும்  ஆடைகள்  , உடற்பயிற்சிக்  கூடம் , விளையாட்டு மைதானம் போன்றகள் மூலம்  இதைச் செய்யலாம் . தொழிலாளர்கள்  எப்பொழுதும் உற்சாகமாக இருப்பதால்  உற்பத்தி த்திறன் இயல்பாக அதிகரிக்கின்றது. .தொழிலாளர்களுக்காகச் செய்த கூடுதல் செலவை விட கூடுதல் உற்பத்தியால் கிடைக்கும் வருவாய் கூடுதலாகவே இருப்பதால் இழப்பு ஏற்படுவதற்கு வழியில்லை. இதற்கு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள தொடர்பில் பிளவு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வண்டியது அவசியம் .  

ஒரு முறை தரமற்ற பொருளால் மக்களை ஏமாற்றிவிட்டால் , அப்புறம் தரமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மலிவான விலையில் கூட சந்தைப்படுத்த முடியாது. தொடர்ந்து உலகச் சந்தையில் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் உற்பத்திப் பொருளின் தரம் ,பயனுறு திறன்  சிறப்பாக இருக்கவேண்டும் .இதை  உறுதிப்படுத்த அரசாங்கம் நேர்மையான தரக்கட்டுப்பாடு அமைப்பை நிறுவுவதோடு அதன் செயல்பாட்டையும் கண்காணிக்கவேண்டும் மலிவான விலையில் தரமான பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான  தொழில் நுட்ப அறிவையும் ,பயிற்சியையும் தொழிமுனைவோர்களுக்கு வழங்க அரசாங்கம் வழிசெய்யவேண்டும் .மூலப்பொருட்கள் , தடையில்லா மின்சாரம் , தண்ணீர் , சாலை வசதிகள், ஏற்றுமதி, இறக்குமதிக்கான உதவி மற்றும் சலுகைகள்  கிடைப்பதற்கும் அரசாங்க அமைப்பின் மூலம் உதவிகள் செய்யவேண்டும் .


No comments:

Post a Comment