Wednesday, January 5, 2011

Vanna vanna ennangal

அது மட்டும் தெரிந்தால் ......



உறங்கிக் கிடக்கும் கல்லுக்குள்

உருவமொன்று ஒளிந்திருக்கு தெரியுமா?

கற்பனையில் அதை இனமறிய முடியுமா?

அது தெரிந்திருந்தால் உனக்கு

காணும் கனவுகளெல்லாம்

நாளைக்கு நடக்கப்போகும் நிகழ்வுகளாகுமே



இருண்டு கிடக்கும் இருளுக்குள்

உணரமுடியாத ஒளியிருக்கு தெரியுமா ?

எரியா விளக்கால் வழி காட்டமுடியுமா?

அது தெரிந்திருந்தால் உனக்கு

செல்லும் வழியெல்லாம்

வெற்றிக்கு வழிகாட்டும் பாதைகளாகுமே



மின்னி மறையும் மின்னலுக்குள்

மின்சாரம் ஓடுது தெரியுமா ?

கம்பியிலா மின்சாரத்தைக் கட்டுப்படுத்தமுடியுமா ?

அது தெரிந்திருந்தால் உனக்கு

செய்யும் செயலெல்லாம்

தொழில்நுட்பச் சாதனைகளாகுமே

No comments:

Post a Comment