Wednesday, November 2, 2011

arika ariviyal

காற்றும் நீரும்

காற்றும் நீரும் ஒரே வெப்பநிலையில் (28 டிகிரி சென்டிகிரேடு) இருந்தாலும்,
பெரும்பாலும் அப்படி உணரப்படுவதில்லை.நீச்சல் குளத்தில் குதிக்கும் போது,
நீரைத் தொட்ட நிலையில் அது சற்று குளிர்ச்சியாக இருப்பதை உணர்வார்கள்.
ஏன் இந்த வேறுபாடு ?

காற்றும் நீரும் பொதுவாக அரிதில் கடத்திகளாகும்.வெப்பத்தை விரைவாகக்
கடத்திச் செல்வதில்லை. இவையிரண்டினுள் காற்றை விட நீர் ஓரளவு
கூடுதலாக வெப்பங் கடத்துகிறது.உடலின் வெப்பநிலை சுற்றுப் புறத்தின்
வெப்ப நிலையை விட அதிகம் .எனவே கடத்தியைத் தொட்டவுடன் உடல்
வெப்பம் அதன் கடத்து திறனுக்கு ஏற்ப கடத்திச் செல்லப் படுகிறது.
இதனால் நீர் குளிர்ச்சியாக இருப்பதாக உணருகிறோம் .

இப் பண்பு ஒரு வைரம் உண்மையானதா இல்லை போலியானதா என்பதைக்
கண்டு பிடிக்கப் பயன் தருகிறது. .உண்மையான
வைரம் கடத்து திறன் மிக்கது. போலி வைரம் அப்படி இல்லை .
எனவே வைரத்தை நாவில் வைத்துப் பார்க்கும் போது அது
குளிர்ச்சியாகத் தெரியும். .

No comments:

Post a Comment