Thursday, November 10, 2011

arika ariviyal

சுடும் பனிக்கட்டி
பனிக் கட்டி என்றாலே குளிர்ச்சியான பொருள் என்று நினைக்கிறோம் .
ஆனால் ஒருவர் பனிக்கட்டியால் தீக்காயம் ஏற்பட்டது என்று சொன்னால்
நம்ப முடிகிறதா ? நம்ப மறுத்த போது அதே பனிக்கட்டியால் என்னையும்
சுட்டுக் காட்டினார் . இது எப்படி சாத்தியமாகும் ?

செயல் படும் அழுத்தம் அதிகரிக்க கொதி நிலையும் உறை நிலையும் அதிகரிக்கின்றன .
நீரில் 20 ,௦௦௦ வழி அழுத்தத்தைச் செயல் படுத்த அது௮ 76 டிகிரி செல்சியஸ்
வெப்ப நிலையில் உறைகிறது .அப்படி உறைந்த பனிக்கட்டி தோலில்
தீக்காயத்தை ஏற்படுத்தக் கூடியது .

குளிர்காலத்தில் தொப்பி அணி

கோடை காலத்தை விட குளிர் காலத்தில் தொப்பி யணிபவர்கள் அதிகம் .ஏன் ?

பொதுவாக தலையிலிருந்து 30 % உடல் வெப்பம் வெளியேறுகிறது .இதற்குக்
காரணம் தலை முடி மட்டுமின்றி ,தலைப் பகுதியின் வெப்ப நிலை பிற
பகுதிகளைக் காட்டிலும் சற்று அதிகமானது. எனவே வெப்பப் பரிமாற்றம்
அப் பகுதியில் அதிகமாக நடை பெறுகிறது. தொப்பி அணிவதால் இந்த
வேப்ப இழப்பு பெரிதும் தடுக்கப் பட்டு உடல் வெப்பம் காக்கப் படுகிறது.

No comments:

Post a Comment