Friday, September 28, 2012

Cartoon


 கார்ட்டூன்

மயன்மார் நாட்டின் புரட்சித் தலைவி சான் சூ (San Suu)அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உரை யாற்றிய போது,காந்தியடிகளின் போதனைகளை உலக மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .

தீவிரவாத அச்சுறுத்தல்கள் மிகுந்து வரும் இந்நாளில் காந்தியடிகளின் அகிம்சை வழிமுறை மட்டுமே உலகைக் காப்பாற்றும் சக்தி வாய்ந்தது என்பதை நாம் அறிந்திருக்கின்றோமோ இல்லையோ  சான் சூ அதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.அதனால் தான் உலக மேடையில் உரக்கக் கூவியதோடு மட்டுமின்றி அரசியல் தலைவர்களை விட்டுவிட்டு உலகை இனி ஆளப் போகும் மாணவர்களின் எண்ணத்தில் இந்த விதையைத் தூவியிருக்கிறார் நம் நாட்டின் அப்துல் கலாம் போல.

இந்தியாவில் இனி ஆளப் போகும் மாணவர்களையும்                   இந்திய அரசியல்வாதிகளே ஆண்டு கொண்டிருப்பதால்,காந்தியடிகளின் போதனைகளை இங்கே மாணவர்களை விட அரசியல் தலைவர்களே முதலில் படித்துப் பின்பற்ற வேண்டும்.

No comments:

Post a Comment