Wednesday, January 2, 2013

Arika Iyarpiyal


அறிக இயற்பியல்

Empty vessal makes more noise என்று சொல்வார்கள்.ஒன்றும் தெரியாத மூடர்கள் தனக்கு எல்லாம் தெரியும் என்பது போலத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் .ஆனால் அதில் விஷயம் எதுவும் இருக்காது.உண்மையான அறிஞர்கள் விஷயங்களைத் தெரிந்திருந்தாலும் அதிகம் பேசி வெளிக்காட்டிக் கொள்வதில்லை.இதில் ஒன்றும் தெரியாமல் அதிகம் பேசுபவனும் ,அதிகம் தெரிந்திருந்து ஒன்றும் பேசாதவனும் யாருக்கும் பயனில்லாதவர்கள் .பேசுவதற்கு பேச வேண்டும் பேசக் கூடாத தற்கு பேசக்கூடாது .இது நல்ல மனிதர்களுக்கு அழகு. அதுவே சமுதாயத்திற்கு நற்பயனளிக்கும்.

 தமிழில் இக் கருத்தைக் கூறும் பழமொழிகள் குறை குடம் தளும்பும் ,நிறை குடம் தளும்பாது ,மற்றும் வற்றிய ஓலை சலசலக்கும் .குறை குடம் ஏன் உரப்புடன் ஒலிக்க வேண்டும் ,நிறை குடம் ஏன் அமைதியாக இருக்கின்றது?

நிறை குடம் புறத்தாக்குதல்களினால் ஏற்படும் அதிர்வுகளைச் சமாளிப்பதால் நீர் ததும்பி வழிவதில்லை.ஆனால் குறை குடம் அப்படியில்லை .குடம் அதிர்வுறு ம் போது.சுற்றுப் புறத்திலுள்ள காற்றூடக அணுக்களும் அதிர்வுறுகின்றன.காலியான குடத்தில் அனைத்து காற்றூடக அணுக்களும் சமகாலத்தில் அதிர்வுறுகின்றன.இதை ஒத்ததிர்வு (Resonance)என்பர்.இதன் காரணமாக ஒலி பன்னிலை எதிரொலிப்புக்கு உள்ளாகி மேற்பொருந்துவதால் ஒலியின் உரப்பு அதிகமாகின்றது .காலியான குடம் அதிகமாகச் சத்தத்தை எழுப்புகின்றது என்று கூறுவது இதனால்தான்.குடத்தில் நீரிட்டு நிரப்பும் போது அதன் மொத்த நிறை அதிகரிக்கின்றது.இப்போது அதிர்வு விசை கூடுதலான நிறையுடைய பொருளை அதிர்வுக்கு உள்ளாக்குவதால் அலை வீச்சு பெரிதும் குறைவுற அதிர்வொலியின் உரப்பும் மெலிந்து போய்விடுகின்றது .

No comments:

Post a Comment