Wednesday, January 9, 2013

Kavithai


இயற்கை மொழிகள்





மின்னிமின்னி மறையுது மின்னல் கீற்று

மிதமிஞ்சி மிரட்டிப் பார்க்குது இடியோசை

எதையோ சொல்ல நினைத்து எப்போதும்

இணைந்தே வருகுது இடியும் மின்னலும்

 

மின்னி மறையும் மின்னல் போல

மனித வாழ்கையும் காலத்தில் கரையுது  

இனம் ஒன்றானாலும் எதிரி யானால்

இனிய வாழ்கையும் இடிந்து போகுது

 

 அருவியில் கொட்டும் அளவில்லா வெள்ளம்

பாறையில் விழுந்து துளிகளாய்ச் சிதறுது

எதையோ சொல்ல நினைத்து தினமும்

எச்சரித்து தற்கொலை செய்து கொள்கிறது


 
 

உயிர்கள் மடிந்து மண்ணில் வீழ்ந்தால்

உயிரும் உடலும் இல்லாமற் போவதில்லை

சிதறும் துளிகள் போல் சிற்றுயிராய்

உயிர்த்தெழுவாய் என்று சொல்லத்தானோ

 

No comments:

Post a Comment