Thursday, January 31, 2013

Kavithai


வேலையின்றி விளையாட்டு வேண்டாமே

 

முத்து முத்தாய் வியர்வைத் துளிகள்

கொத்துக் கொத்தாய் நிலத்தில் விழ

உடன் செய்ய வேலை இல்லாமலில்லை

உடல் சோர்ந்து போகவில்லை இருந்தும்

உழைப்பின்றி ஓய்வு தேடும் உள்ளங்கள்

உயர்ந்து வரும் பொல்லாத காலமிது

 

ஒருலட்சம் பேர் ஒன்றுகூடிப் பார்க்க

ஒன்பது கோடி சின்னத் திரையில் நோக்க

ஒவ்வொரு மைதானாமாய் கிரிக்கெட் போட்டிகள்

உலகைச் சுற்றி  ஊர்வலமாய் ஒவ்வொருநாளும்

எழுபத்தியிரண்டு கோடியே எட்டு லட்சம் மணித்துளிகள்

எவருக்கும் பயனின்றி பாழாய்ப்போனதே

 

 மனிதஉழைப்பு மட்டுமா இல்லாமற் போனது

மின்சாரமும் பயனுக்கின்றி அங்கே வீணானது

ஆக்கத்தில் முதலீடின்றி ஆற்றலை இழப்பது

எதிர்காலத்தை இருளில் அல்லவா மூழ்கடிக்கும்

விளையாட்டின்றி வேலை இருக்கலாம்

வேலையின்றி விளையாட்டிருக்கலாமோ

 

இழந்த செல்வதை மீட்டுப் பெறலாம்

இறந்த உயிரைக்கூட மீண்டும் பெறலாம்

இறந்த காலம் யாருக்கும் கிடைப்பதில்லை

இறைவனேயானாலும் அவருக்கும் விலக்கில்லை

காலம் பொன்னானது பொன்னைவிட மேலானது

காலம் தவறி உணர்வதை விடவே மாட்டோமா

 

No comments:

Post a Comment