Sunday, October 10, 2010

Arika ariviyal-10



கார்ல் எட்வர்ட் சுகன் ( ) ( 1934 - 1996 ) என்றொரு அமெரிக்க விண் இயற்பியல் விஞ்ஞானி. இரஷ்யாவிலிருந்து குடியேறிய யூதரான தந்தைக்கும் அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவர் .பெற்றோர்கள்

முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருந்ததால் கார்ல் சுகன்
பெரும்பாலும் அம்மாவிடமே வாழ்ந்து வந்தார் .இவர் எழுதிய பல
பொது அறிவியல் நூல்கள் மக்களிடையே மிகவும் பிரபலமானவை .நான்கு வயது இருக்கும் போது சுகன்
அமெரிக்காவில் நடைபெற்றஒரு பொருட்காட்சிக்குச்
சென்றார் . அதுவே முதலில் அவருக்கு ஒரு திருப்பு
முனையாக அமைந்தது .விஞ்ஞான விசித்திரங்கள்
அவருக்குள்ளே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது வெறும்
ஒலியை கண்ணால் பார்த்து உணரக்கூடிய ஒரு
படமாகவும், கண்ணால் பார்க்கக் கூடிய படத்தை  ஒலி
ஓசையாகவும் மாற்றமுடியும் என்பதைக் கண்ட சுகன்
அப்பொழுதே தன்னை விஞ்ஞானத்திற்கு அர்பணித்துக்
கொண்டார் .

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் . பிரமிப்பூட்டக் கூடிய மிகப் பிரும்மாண்டமான காட்சிகள் எல்லாம் நாமை வெகுவாகக் கவருகின்றன .அவை மௌனமாய்க் கூறும் செய்திகள்
நமக்குள்ளே ஒத்ததிரும் போது நமக்குள்ளும் ஒரு பெரிய
மாற்றம் நிகழ்கிறது .வீட்டுக்குளே அடைந்திருந்தாலும் ,வெறும் புத்தகங்களையே படித்துக் கொண்டிருந்தாலும் அதனால்
இது போன்ற வலுவான திருப்பு முனைகளைப் பெறவே
முடியாது .எனவே உங்கள் குழந்தைகளும் எதிர்காலத்தில்
ஒரு வெற்றியாளனாக வரவேண்டும் என்று
உண்மையிலேயே நீங்கள் விரும்பினால் ,உங்கள்
குழந்தைகளுடன் தினமும் கொஞ்ச நேரம் அவர்களுக்குப்
பிடித்த பொது விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள் . வெளியில்
பல இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள் . உங்களோடும் ,
வெளியில் இயற்கையோடும், பிறரோடும் ஏற்படுத்திக்
கொள்ளும் உறவாடல்களே உங்கள் குழந்தைகளின்
உயர்விற்கு உறுதியான நன்மை பயக்கும் .
                                     *************


ஒருவர் ஒரு சிறிய படகில் துடுப்பை இயக்கி நீரோட்டத்திற்கு
எதிராகச் செல்ல முயற்சிக்கிறார் .ஆனால் உந்து விசை
போதாமையால் படகு நகராமல் அதே இடத்தில்
இருக்கின்றது. அப்போது அவர் ஏதும் வேலை
செய்கின்றாரா ? அவர் செய்த வேலை என்ன வாயிற்று ?
                                                **************
 படகிற்கும் ,நீரோட்டத்திற்கும் இடையே ஒரு சார்பு வேகம்
உள்ளது. நீரோட்டத்திற்கு எதிராக அவர் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அவர் வேலை ஏதும் செய்யவில்லை

என்றால் நீரோட்டத்தின் இழு விசை காரணமாக பின்னுக்குத்
தள்ளப்படுவார். பின் அவர் முன்பிருந்த அந்த இடத்தை அடைய
அவர் வேலை செய்தாகவேண்டும். பூமியைப் பொருத்தமட்டில்
அவர் வேலை ஏதும் செய்யவில்லை.ஏனெனில் இடப்பெயர்ச்சி
சுழியாகும் .

No comments:

Post a Comment