Friday, October 29, 2010

vanna vanna ennangal

. மன அழுத்தத்திற்கு மருந்து மனமே







மன அழுத்தம் வரும் பின்னே

பிரச்சினைகள் வரும் முன்னே

இப் புதுமொழி தரும் உண்மைகள்

எல்லோரும் பெறும் நன்மைகள்



பிரச்சினைகள் பல வந்துவிட்டால்

மனமே நமக்குத் தொல்லை

பிரச்சினைகள் ஏதும் இல்லாவிட்டால்

மனவழுத்தம் என்றும் இல்லை



பிரச்சினைகளின் மூலமும் அவரே

தேடும் தீர்வும் அவரே

கேள்விக்கு விடை உள்ளே இருக்க

வெளியே தேடுவதில் பயனில்லை



வாழ்க்கையைப் புரிந்து கொண்டால்

வரும் பிரச்சினையின் கடுமை குறையுமே

ஆசைகளை விட்டு விட்டால்

அதன் அளவில் பாதி மறையுமே



பிரச்சினைகளே ஒரு பாடம் என்றால்

அதைப் படிக்காமல் விடாதே

பழகினால் அதுகூட உனக்கு

நன்மை தரும் நண்பனே



பிரச்சனைகளை உறுதியோடு சந்தி

பின்னர் உறவாடி சிந்தி

தீயவன் நல்லவனாக மாறிவிட்டால்

தீமைகள் தீண்டுவதே இல்லை

No comments:

Post a Comment