Monday, November 22, 2010

vanna vanna ennangal -26

ஒரு தாய் மக்கள்





பூமிக்கு உயிரில்லை என்றாலும்

அவள் ............

உயிரினங்களை உருவாக்கும் ஒரு நிரந்தரத் தாய்

பூமியில் ஒரு தாய்க்குப் பல பிள்ளைகள்

பூமித் தாய்க்கோ பல உயிரினங்கள்

முன்னவள் களவால் கர்ப்பமுற்றாள்

பின்னவள் இயல்பால் உயிர்படைத்தாள்

அவளுக்கு வயிற்றில் பை

இவளுக்கு வயிறே பை

பிறப்பொக்கும் எல்லா உயிரினங்களும்

ஒருதாய் மக்கள் என்பதால்

நாமெல்லோரும் உறவினர்கள்

பிற உயிரினங்கள் எல்லாம் நண்பர்கள்

ஒரு பிரசவத்தில் இரு குழந்தைகள்

என்றால் இருவரும் இரட்டையர்கள்

ஒரு நாள் பூமியில் பிறந்தோரெல்லாம்

ஒருவரையொருவர் அறியா இணையர்கள்

தாயின் உடலிலிருந்து உதிர்ந்த மண்ணே

உயிருக்கு உடலானது

உயிர்பிரிந்து வீழ்ந்த உடலே

உயிரில்லாத் தாய்க்கு உரமானது

தாய்க்கும் தாயானவளே

நீ நெடிது வாழ

என் உடலை உனக்கு

மீண்டும் மீண்டும் அர்பணிப்பேன் .

No comments:

Post a Comment