Tuesday, July 30, 2013

Kavithai

பலவீனம் 
பலவீன ராய் மாறிக் கொண்டிருக்கின்றாய் 
பல துன்பங்களால் துயரப்படுகின்றாய் 
உன்னுடலில் மட்டுமில்லை பலவீனம் 
உள்ளத்திலும் ஊடுறுவியதை அறிவாயா ?

ஆசை முளைத்து பேராசையானால் 
அலையும் மனமே பலவீனமாகும்
அறம் துறந்து ஏமாற்றிவந்தால் 
அந்த அறிவே பலவீனமாகும் 
சோம்பல் புகுந்து சோம்பேறியானால்
உடலின் சுகமே பலவீனமாகும் 

முயற்சியின்றி முடங்கிக் கிடந்தால்
முயலாமையே வழியின் பலவீனமாகும் 
ஆணவமிகுந்து அலட்சியம் கொண்டால் 
வன்மையே வளர்ச்சியின் பலவீனமாகும் 
ஒற்றுமை சிதறி வேற்றுமையானால் 
அன்பின்மையே வாழ்க்கையின் பலவீனமாகும்


No comments:

Post a Comment