Tuesday, August 17, 2010

vanna vanna ennangal-10

10.ஒன்னுமே புரியலே உலகத்திலே


                     "காவேரி"


என்னென்னமோ நடக்குது நாட்டிலே
எதுவுமே புரியலே வீட்டிலே

ஆளும் தலைவனைக் கேட்டால்
அமைச்சனைக் கேளு என்பார்
அமைச்சரை அணுகிக் கேட்டால்
அதிகாரியைக் கேளு என்பார்
அதிகாரியைத் தேடிக் கேட்டால்
மக்கள் ரெம்ப மோசம் என்பார்

என்னென்னமோ நடக்குது நாட்டிலே
எதுவுமே புரியலே வீட்டிலே

மக்களைக் கூட்டிக் கேட்டால்
அதிகாரியைச் சுட்டிக் காட்டுவார்
அதிகாரியை அதட்டிக் கேட்டால்
அமைச்சரை இட்டுக் கட்டுவார்
அமைச்சரைத் தட்டிக் கேட்டால்
தலையே ரெம்ப மோசம் என்பார்

என்னென்னமோ நடக்குது நாட்டிலே
எதுவுமே புரியலே வீட்டிலே

தினம் தினம் தவறுகள்
திரும்பத் திரும்ப நடந்தாலும்
எங்கே தவறு என்று
இன்னும் தெரியலையே எனக்கு
தவற்றைத் தடுத்து நிறுத்த
தெரியுமா ஒருவழி உனக்கு?

No comments:

Post a Comment