Monday, August 9, 2010

vanna vanna ennangal-8k

மரணமும் மறுபிறப்பும்

             "காவேரி"

முதிர்ந்து உதிர்ந்து

நிலத்தில் விழுந்த இலை

அதே மரத்தில்

துளிர் விட்டுச் சிரிக்கின்றது



விழுந்து புதைந்து

பூமியில் இறுகிய மரம்

அதன் வயிற்றில்

வைரமாய் ஜொலிக்கின்றது



நீ இறந்து

நிலத்தில் புதைந்தால்

உன் நிலையும் அதுதான்

பூமிக்குள் ஒரு வைரமாய்

பின் புதையலாய்

வேற்றுயிராய்

இலைக்கும் இருக்கு

மரத்திற்கும் இருக்கு

மீண்டும் பிறப்போம்

என்ற நம்பிக்கை

உனக்கு ஏன்

அவ நம்பிக்கை?

No comments:

Post a Comment