Thursday, August 5, 2010

vanna vanna ennangal-7

அன்பே சர்வ மயம்


"காவேரி"



எலக்ட்ரானைப் புரோட்டன் நேசித்ததால்

அது அணுவானது

அணு அணுவை நேசித்ததால்

அது மூலக்கூறானது

மூலக்கூறு மூலக்கூறை நேசித்ததால்

அது பொருளானது

பொருள் பொருளை நேசித்ததால்

அது உயிரானது

உயிர் உயிரை நேசித்ததால்

அது ஊரானது

ஊர் ஊரை நேசித்ததால்

அது உலகமானது

உலகம் உலகை நேசித்ததால்

அது அண்டமானது

அண்டம் அண்டத்தை நேசித்ததால்

அது பிரபஞ்சமானது

நேசிப்பே நேர்ச்சி என்றால்

நேசிப்பை நேசிக்க மறக்கலாமோ?

No comments:

Post a Comment