Wednesday, April 10, 2013

creative Thoughts


Creative Thoughts

எப்படி வளர வேண்டும் என்று சொல்லிக் கொடுக்காமல் எப்படி வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரும்பாலும் ஏமாற்றமே தரும் .

பூமி சூரியனை ஒரு வட்டப் பாதையில் சுற்றி வருகின்றது என்றால் அது ஒரு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு காலமெல்லாம் இயங்கி வருகின்றது .தன் பாதையை விட்டு விலகி வேறு பாதையில் சென்றால் ..... பூமிக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம் .அதுபோல நாமும் நம் வாழ்கையில் ஒரு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு வாழ விரும்பவேண்டும் .கட்டுப்பாடில்லாத வாழ்கை நூலறுந்த பட்டம் போல .

மனதைத் தினமும் சரியாகக் கவனிக்காவிட்டால் வாழ்க்கை தடுமாறிப் போகும் .இயந்திரங்களுக்கு எண்ணெய் போல ,மனதிற்கு எண்ணங்கள் .

குறுகிய காலத்தில் ஒருவரிடம் ஒரு மகத்தான மாற்றத்தை அவருடைய மனம் நினைத்தால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.

தாங்கள் அழிந்தே போனாலும் பரவாயில்லை .ஆனால் விட்டுக் கொடுத்துப் போகமாட்டோம் என்ற கொடிய எண்ணம் இன்றைக்கு எல்லோரிடமும் வளர்ந்து வருகின்றது .

சுய முன்னேற்ற நடவடிக்கைகளில் பெரும்பாலும் ஒருவருக்கு அவரே தடையாக இருக்கின்றார்.அவருக்கு அவரே தடையாக இருப்பதை அவர் ஒப்புக் கொள்வதேயில்லை .சுய முன்னேற்றத்தில் கட்டளையிடும் எஜமானரும் அவரே ,அதைச் செய்து முடிக்க வேண்டிய வேலைக்காரனும் அவரே என்பதால் இந்தத் தடை தவிர்க்கயிலாததாகி விடுகின்றது

 எதிர்மறையான எண்ணங்கள் மனதில் மிகுந்திருந்தால் ,வாழ்கையில் நிலையான நம்பிக்கையைப் பெறுவது கடினமாகும் .

No comments:

Post a Comment