Tuesday, April 9, 2013

Kavithai


நினைவுகளின் நிகழ்திறம்

நினைத்ததெல்லாம் நினைத்தபடி நடந்ததில்லை

நடந்ததெல்லாம் நடந்தபடி நினைத்ததில்லை

நினைவுக்கும் நிகழ்வுக்கும் ஏனிந்தப் பகை

நினைப்பதெல்லாம் நடக்க என்னதான் வழி
 

கனவுகள் நினைவானால் நிகழ்வுகள் நிஜம்

நினைவுகள் கனவானால் நிஜங்களும் நிழல்

நினைவே நிகழ்வாக நிகழ்வே நினைவாக

நிச்சய வழியிருக்க நம்பிக்கை கொள்க  
 

நினைவுகளை விதைப்பது விண்வெளியில்

நிகழ்வுகள் விளைவது  மண்வெளியில்

நினைவுகள் மலர்வது உள்ளுக்குள்ளே

நிகழ்வுகள்  கனிவது  உடலுக்குவெளியே
 

உறுதியான நினைவுகள் ஒன்றானால்

உருவமாகும் நிகழ்வுகளும் நன்றாகும்

உருவமில்லா நினைவுகள் பலவானால்

உண்மையான நிகழ்வுகளும் நிலைமாறும்
 

படிகள் ஏறஏற எட்டுமுயரம் ஏறும்

உயரம் கூடக்கூட அகவாற்றல் கூடும்

ஆற்றல் வரவர தன்திறம் வளரும்

தந்திரமில்லாத் தன்திறமே உன்தகுதி
 

நினைப்பதெல்லாம் நடக்குமென்பார்

நிலையான  தகுதிப்பாடு கொண்டார்

தகுதிகள் எவ்வளவோ அவ்வளவே

நினைவுகளின் நிகழ்திறம் என்றே சொன்னார்

No comments:

Post a Comment