Thursday, September 22, 2011

arika iyarpiyal

வெண்ணிற ஆடையும் நீலமும்

வெண்ணிற ஆடைகளை வெளுக்கும் போது அதற்கு நீல நிறமிடுகிறோம்.வியாபாரிகள் சலவைச் சோப்பையே நீல
நிறத்தில் உற்பத்தி செய்து மக்களைக்கவருகிறார்கள்.
வெளுத்த பின் வெண்ணிற ஆடைகளுக்கு நீலமிடுவதேன் ?


தொடர்ந்து சலவை செய்யப்பட்ட வெண்ணிற ஆடை பழுப்பேறி
மஞ்சள் நிறங் கொண்டிருக்கும் .நீலமிடும் போது
இது மீண்டும் வெண்ணிறமாக் கப் படுகிறது. இதற்குக் காரணம்
நீளமும் மஞ்சளும் ஒன்றிணைந்து வெண்மை யாக்கவல்ல
நிறங்களாகும் .

கண்ணாடியின் நிறம் எங்கே போனது ?

நிறமுள்ள ஒரு சிறு கண்ணாடித் துண்டை நுண் பொடியாக்கினால்
அது வெண்ணிறமாகத் தோன்றுகிறது. கண்ணடித் துண்டின்
நிறம் என்னவானது ?

கண்ணாடி துண்டில் ஒளி விழும் போது ,அது பெற்றிருக்கின்ற
நிறத்தைத் தவிர்த்த பிற நிற ஒளி அலைகளை உட் கடத்த
அனுமதிக்கிறது .அக் குறிப்பிட்ட நிற ஒளி எதிரொளிக்கப்
படுவதால் அக் கண்ணாடி அந்நிறமுடையது போலத்
தோன்றுகிறது. நுண் பொடியாக்கப்பட்ட கண்ணாடியில்
ஒளி நுண் துகள்களின் வெவேறு தளங்களில் மீண்டும் மீண்டும்
விழுந்து எதிரொளிக்கப்படுகின்றது. அதனால் உட்கடந்து செல்வதில்லை ,உட்கிரகிக்கப் படுவதுமில்லை .விரவலுற்று
எதிரொளிக்கப் பட்ட வெள்ளொளி நிறமுடைய கண்ணாடியின்
பொடியை வெண்ணிற முடையதாகக் காட்டுகிறது

No comments:

Post a Comment