Wednesday, September 21, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்
ஊழலை ஒழிப்பது என்பது சுலபமான வேலையில்லை. அரசிடம் இல்லாத கண்காணிப்பும் ,மக்களிடம் இல்லாத சுய கட்டுப்பாடும்
ஊழல் பெருகிப் போனதிற்கு அடிப்படையான காரணங்களாகும் . இவை இரண்டும் உணமையாகக் கடைபிடிக்கப் படாத போது
ஊழல் ஒழிப்பு என்பது இயலாத காரியமாகவே இருக்கும்.
இந்த விஷயத்தில் " prevention is better than cure " என்பதின் உட்பொருளை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவே இல்லை அல்லது புரிந்தும்
புரியாதது போல நடந்துகொள்கிறோம் என்று தான் சொல்லவேண்டும். சுயக் கட்டுப்பாடு இல்லாத மக்களிடம் ஊழல் தொடங்கி இருந்தால்
பலவீனமற்ற அரசின் கண்காணிப்பு அதை ஆரம்ப நிலையிலேயே எளிதில் ஒடுக்கி இருக்கும் .கண்காணிப்பு இல்லாத அரசு காரணமாக
இருந்தால் மயக்கமும் சலனமும் இல்லாத மக்களின் விழிப்புணர்வு அதை வேரறுத்திருக்கும். மனம் அனுமதித்தால் யாருக்கும்
தெரியப்போவதில்லை என்று நாம் தவறாக நம்பி .பொது ஒழுக்கத்தைப் பெரிதும் சீர்குலைத்து விட்டோம் .அதன் விளைவுகளை எல்லோரும் சேர்ந்துதானே சந்திக்கப் போகிறோம் என்று அதைப் பற்றி யாரும் இப்பொழுது கவலைப் படுவதாகத் தெரியவில்லை . பின் விளைவுகள்
மிகவும் மோசமாக மாறுவதற்கு முன்னர் விழித்துக் கொள்வதுதான் அரசுக்கும் மக்களுக்கும் நல்லது.
ஊழலை ஒழிக்கவே முடியாது என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் என்றால் ,ஊழலை அவர்கள் மறைமுகமாக அனுமதிக்கின்றார்கள்
என்று அர்த்தப்படும் .ஊழலை ஒழிக்க அரசு முற்ப்பட்டால் ,செல்வாக்கும் பலமும் மிக்க பலரின் எதிப்புகளைச் சந்திக்க வேண்டிவரும் .
அதனால் அரசு கூடக் கவிழ்ந்து விடலாம்..மூடி மறைத்த பழைய ஊழல்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ,தன்னைத் தானே
காட்டி விடக் கூடும். எளிய வேலை ஆனால் நிறைய அனுகூலம் என்றே பழக்கப் பட்ட நம் அரசியல்வாதிகள் ,கடிய வேலை ,ஆதயமின்மை
இணைந்த பணிகளில் ஈடுபட விரும்புவதே இல்லை. அதனால் இதை மக்களின் பலவீனமாகவே சித்தரிக்க அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள் .
மக்கள் லஞ்சம் கொடுப்பதால் தானே ஊழல் உருவாகிறது என்பது இவர்கள் வாதம்.
இது உண்மையில் தவறான வாதம் என்று
தான் நான் கூறுவேன் . லஞ்சம் கொடுத்தல் உடனடி வேலை .இல்லாவிட்டால் ஒருக்காலும் இல்லை. .
அலைச்சல் ,மன உளைச்சல் ,கால விரயம் ,வீண் செலவு இவைதான் மிச்சம் .இதை எல்லாம் தாங்கிக் கொள்ள பழகிக் கொண்டாலும் தேவை
நிறைவேறா விட்டால் என்ன செய்யமுடியும் ?
மக்களும் ஊழலுக்கு உண்மையான எதிரிகளாக இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. இல்லாவிட்டால் ஊழல் அரசியல்வாதிகள் செழித்து
வளர்ந்திருக்க மாட்டார்களே .எப்போதோ அழிந்து போய் இருப்பார்களே ஊழலால் ஆதாயம் கிட்டும் போது யாருக்கும் தெரியாமல் அதை அனுமதிக்கிறான் .அதே ஊழலால் துயரம் வரும் போது எல்லோர்ரும் அறியுமாறு வாய்கிழியப் பேசுகின்றான் .
ஊழலைப் பொறுத்த வரை ஒவ்வொரு மனிதனும் இரட்டை வேடம் போடுகின்றான் . உள்ளே ஒருவன் வெளியில் ஒருவன் .

No comments:

Post a Comment