Monday, September 26, 2011

arika iyarppiyal

ஆழ் கடலில் சிவப்பு ரத்தம் பச்சை நிறமாகி விடுமா ?
ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட நிறங் கொண்டிருப்பதற்குக் காரணம், அது அந்நிற ஒளியைத் தவிர்த்து பிற
ஒளியை உட்கவந்துவிடுவதும் ,அந்நிற ஒளியை எதிரொளிப்பதும் ஆகும். இதற்கு அப்பொருளில் சிறப்புத் தன்மை கொண்ட
வேதிப்பொருள் ஒன்று இருக்க வேண்டும். இலை பச்சையாக இருப்பதற்கு காரணம் குளோரோபில் என்ற பச்சையமாகும் .
இது பச்சை தவிர்த்த பிற நிற ஒளியை உட்கவருகிறது. இரத்தம் சிவப்பாக இருப்பது அதிலுள்ள ஹிமோகுளோபின்
காரணமாகிறது .
ஆழ் கடலில் ஒருவர் இரத்தத்தை பச்சை நிறமுடையதாகக் கண்டார். ஆழ் கடலில் கறுப்பாகத் தோன்றிய மீன், கரைக்கு வரும் போது கருஞ்சிவப்பாகத் தோன்றியது. இந்த நிறமாற்றம் ஏன்
தோன்றுகிறது ?
பச்சை நிறப் பொருள் பச்சை தவிர்த்த பிற ஒளிகளை உட்கவருவதை போல கறுப்பு நிறப் பொருள் அனைத்து
ஒளிகளையும் உட்கவரும் என்றும் வெண்ணிறப் பொருள் ஒரு ஒளியையும் உட்கவராது என்றும் கூறலாம்.
நீர் சில குறிப்பிட்ட ஒளியை உட்கவருவதால் அது முழுமையான நிறமற்ற பொருள் அல்ல . நீரின் பரப்பில் விழும் வெண்ணிற ஒளி ஆழ் கடலில் (15 மீட்டர் ஆழத்திற்கும் கூடுதலான ஆழத்தில் ) வடிகட்டப்பட்டு கால் பங்கு ஒளியே சென்றடைகிறது .30
மீட்டர் ஆழத்தில் சிவப்பு நிறம் சிறிதும் இல்லை . நீர் மூலக்கூறுகள் சிவப்பு ஒளியை பிற நிற ஒளியை விட அதிகமாக உட்கவருகின்றன .சிவப்பு நீங்கிய வெள்ளொளி பச்சை கலந்த நீல நிறத்துடன் தோன்றுகிறது. 200
மீட்டர் ஆழத்திற்கு அப்பால் ஒளி சிறிதும் இல்லை.

No comments:

Post a Comment