Monday, September 26, 2011

arika iyarppiyal

இருளில் ஒளிரும் எருதின் கண்கள்


இரவில் நாம் பேருந்து அல்லது சிற்றுந்து மூலம் பயணம்
செய்யும் போது எதிர்ல் வரும் விலங்குகளின் கண்கள்
பிரகாசமாக ஒளிர்வதைப் பார்க்கிறோம் . இருளில் அவை
எப்படி பிரகாசிக்கின்றன ?

இரவில் உண்மையில் விலங்கினங்களின் கண்கள்
பிரகாசிப்பதில்லை .ஏனெனில் அவைகளுக்குத் தானாக
ஒளியை உமிழும் தன்மை இல்லை .அவற்றின் மீது
விழும் ஒளியை எதிரொளிப்பதால் இப்படிப் பிரகாசிக்கிறது .
சாலை ஓரம் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கைக் காட்டிகளைப்
போல இது செயல்படுகிறது எனலாம். சிவப்புக் கண்ணாடி போல
தெளிவான சிவப்பு நிறத்தை சிலந்தியும், பச்சை நிற
ஒளியை குள்ள நரியும் ,ஒளிரும் சிவப்பு நிறத்தை முயலும்
தருகின்றன. சிவப்பு நிறத்திற்கு கண்ணில் உள்ள நீர்மங்களில்
கரைந்துள்ள சிறப்பு வேதிப் பொருளே காரணமாகும் .
பெரும்பாலான விலங்கினங்கள் இரவில் நடமாடுகின்றன.
இரை தேடுவதையும் ,வேட்டையாடுவதையும்
இரவிலேயே செய்கின்றன. கண் விழியின் பின்புறத்தில்
இவை ஒளி எதிரொளிப்புத் தளத்தைப் பெற்றுள்ளது .
ஏனெனில் கிடைக்கும் நிலவொளி மற்றும் விண்மீன்களின்
ஒளியைக் கொண்டே அவை இரவில் புற உலகைக்
காண வேண்டியிருக்கின்றன. இந்த ஒளி கண்ணில் விழுந்து
பல மடங்கு பெருக்க மடைந்து வெளியேறுகிறது .
மனிதர்களின் கண்களுக்கு இத்தகைய தன்மை இல்லை.
மேலும் முழு இருட்டில் விலங்கினங்களால்
பார்க்கமுடியாது . ஆனால் பார்பதற்குத் தேவையான
குறைந்த அளவு வெளிச்சம் ,மனிதர்களுக்குத் தேவையான
அளவைவிடக் குறைவு

No comments:

Post a Comment