Wednesday, September 21, 2011

Eluthaatha kaditham

ஊழல் ஒழிப்பு
ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் அதற்கு நேர்மை ,எல்லோரிடத்திலும் நேர்மை மிக மிக அவசியம் ..இது அமைதியாக
உடலோடு உறங்கிக் கொண்டிருந்தாள் அதனால் யாதொரு பயனுமில்லை .இது அவர்களுடைய பேச்சிலும் ,முக்கியமாக
செயலிலும் வெளிப்பட்டுத் தோன்றவேண்டும் . சமுதாய வாழ்க்கைக்கு நேர்மை ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் .
அப்பொழுதான் அது காலப்போக்கில் நிலைப்பட்டு நிற்கும்.
நேர்மைக்கு முக்கியத்துவம் இல்லாத போழ்து ,பனியின் சீர்மை கெடும் ,அதனால் செயல் முறையில் காலதாமதம் ஏற்பட
மக்களிடைய ஒரு அவ நம்பிக்கை தூண்டப்பட்டு ஊழல் எளிதாக உள் நுழைந்து விடுகிறது .
ஊழலை உற்சாகப்படுத்த மக்களிடையே நம்பிக்கை இழப்பை ஏற்படுத்துகிறார்கள் .இதற்கு பணியில் கால தாமதம் அவர்களுக்கு ஆயுதமாகப்
பயன்படுகிறது.
வேலை ஆகவேண்டும் என்பதற்காக இலஞ்சம் கொடுப்பவர் கொடுக்க மனமில்லாமலேயே கொடுக்கிறார். வேலை செய்ய ஊதியம் வாங்கிக்கொண்டு
கூடுதல் பொருள் சேர்க்க ஆசைப்பட்டு ,அதே வேலையைச் செய்ய லஞ்சம் வாங்குகிறார். இதி கொடுப்பவர் ஊழலுக்கு எதிரி என்றும் வாங்குபவர்
ஆதரவாளர் என்றும் கூறமுடியாது. ஏனெனில் ஒரு சமயம் லஞ்சம் கொடுப்பவர் மற்றொரு சமயம் வாங்குபவராகி விடுகிறார் .
இதுவரை லஞ்சம் வாங்காவிட்டாலும் ,லஞ்சம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கூட ஒரு வகையில் ஊழலுக்கு ஆதரவு தான் . அதனால்
ஊழல எங்கே இருக்கிறது எங்கே இல்லை என்பதை யாராலும் வரையறுக்க முடியாது .
நேர்மையான அணுகுமுறை எல்லோரிடத்திலும் எங்கும் எதிலும் காணப்படவேண்டும் . அதற்கு அரசின் கண்காணிப்பு என்ற பயமும் ,
சுய கட்டுப்பாடு என்ற பழககமும்தான் நற்பயன் தரும் .

No comments:

Post a Comment