Friday, September 23, 2011

arika iyarppiyal

கானல் நீர் எப்படி உண்டாகிறது ?


கடும் கோடை வெயிலில் தார்ச் சாலைகளில் சென்று
கொண்டிருக்கும்போது தொலைவில் கானல் நீர் தென்படும்.
அதனால் தரைக்கு மேலாக உள்ள பொருட்கள் பிம்பம்
தலைகீழாகத் தெரியும். அதாவது வறண்ட சாலையில்
கொஞ்சம் தண்ணீர் கொட்டிக் கிடப்பது போலவும் ,அதில்
மரங்கள்,கட்டடங்கள் போன்றவை மெலிதாக பிரதிபளிப்பதைப்
போலவும் தோன்றும், இப்படித் தோன்றுவதற்கு என்ன காரணம் ?

கோடை காலத்தில் புவிபரப்பு மிக அதிகமாகச் சூடேறுவதால் ,
அதை ஒட்டியுள்ள காற்று அதிகமாகச் சூடாக்கி அடர்த்தி
குறைவாகிவிடுகிறது .ஆனால் அதை அடுத்துள்ள காற்று
அதை விட அடர்த்தி மிக்கதாக இருக்கும். தொடர்ந்து மெதுவாக
வெப்பச் சலனம் ஏற்பட்டாலும் இவ்வடர்த்தி வேறுபாடு
நிலையாக இருக்கிறது. அதனால் காற்றடுக்குகளில் ஓர்
அடர்த்திச் சரிவு கீழ்நோக்கியும் ,வெப்ப நிலைச் சரிவு
மேல்நோக்கியும் ஒழி விலகல் எண் (refractive index )
சரிவு கீழ் நோக்கியும் ஏற்படுகின்றன. இது தார் சாலைகளிலும்
பாலை வனங்களிலும் குறிப்பிடும்படியாக இருக்கிறது.

அதிகாலையில் அமைதியான ஏரியின் பரப்பு வளிமண்டலக்
காற்றை விடச் சூடாக இருக்கும். மாலையில் காற்றைவிடக்
குளிர்ச்சியாக இருக்கும்,பனிப் பிரதேசங்களில் காற்றின்
மேலடுக்கைவிடக் கீழ் அடுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
இது போன்ற சூழல்களில் காற்று வெளியின் ஒளி விலகல்
எண் சீரற்றதாக இருக்கிறது. இதனால் மாற்றங்களைப்
பொறுத்து பல வகையான வினோத பிம்பங்களைப் பார்க்க
முடிகிறது.

தொலைவில் உள்ள ஒரு பொருளை நோக்கும் போது
அதிலிருந்து சற்று சரிவாக கீழ் நோக்கி வந்து நம்மை அடையும்
ஒளிக் கற்றை அடர்மிகு ஊடகமான காற்றின் மேலடுக்கிலிருந்து
அடர் குறை ஊடகமான காற்றின் கீழடுக்கிற்குச் செல்வதால்,முழு
அகப் பிரதிபளிப்பு ஏற்படுகிறது. அதாவது அடர் குறை ஊடகத்திற்குச் செல்லாமல்,அடர் மிகு ஊடகத்திலேயே எதிரொளிக்கப்படுகிறது.
இது தரையின் கீழிருந்து வருவது போலத் தோன்றும்.அதனால்
தரையில் தண்ணீர் இருப்பது போலவும் அதன் எதிரொளிப்பினால்
அப்படி பிம்பம் தெரிவது போலவும் நாம் உணர்வதால் அந்தப்
பொய்யான தண்ணீரை கானல் நீர் என அழைக்கிறோம் .

No comments:

Post a Comment