Monday, September 12, 2011

arika iyarppiyal

இரு சோதனைகளில் எது உண்மை ?

ஒரு மாணவன் 100 வாட் மின்னிழை விளக்கின் மின்தடையை
மதிப்பிட இரு சோதனைகளை மேற்கொண்டான் .
மல்டிமீட்டர் மூலம் மதிப்பிட 35 ஓம் என்ற மதிப்பைப் பெற்றான்.
இதை ஏற்கனவே மதிப்பிடப்பட்டு பல்பில் குறிப்பிடப்பட்டுள்ள
மதிப்பைக் கொண்டு உறுதி செய்ய முயன்றான் .அதில் 220
வோல்ட் ,100 வாட் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.மின்தடை
என்பது மின்னழுத்தத்தின் இருமடிக்கும் மின் திறனுக்கும்
உள்ள தகவாகும்.இது 484 ஓம் என்ற மதிப்பைத் தந்தது.
இதில் எது உண்மை ? இந்த முரண்பாடான முடிவை எப்படிக்
களைவது ?
***********

இரண்டுமே உண்மைதான். முதலில் செய்த சோதனையில்
மின்தடை தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ளது .
மின்தடை வழியாகச் செல்லும் மின்னோட்டம் அதன் வெப்ப
நிலையை உயர்த்தப் போதுமானதாக
இல்லை .ஆனால் மதிப்பிடப்பட்ட மினதடையானது,
மின்னிழை வெண்மையாகச்சூடுபடுத்தப்பட்ட நிலையில்
மின்னோட்டம் செல்லும் போது மின்திறன் பெறப்பட்டுள்ளது .
ஒரு பொருளின் மின்தடை வெப்ப நிலை
அதிகரிக்க அதிகரிக்கிறது . எனவே முதல் சோதனையில்
தாழ்ந்த வெப்ப நிலை மின்தடையும் ,இரண்டாவது
சோதனையில் உயர் வெப்ப நிலை மின்தடையும்
மதிப்பிடப்பட்டுள்ளன.
**************
இழை விளக்கும் மின்சுருளும்

ஒரு மின்னிழை விளக்கு செம்புக் கம்பியால் சுற்றப்பட்ட
நீண்ட மின் சுருளுடன் தொடரினைப்பில் இணைக்கப்பட்டுள்ளது
மின் சுருளின் உள்ளகம் காற்று . சுற்றில் ஒரு மின்னியக்கு
விசை கொடுக்க மின் விளக்கு எரிகிறது.
அப்போது ஓர் இரும்புத் தண்டு மின் சுருளின் மையத்தில்
உள்ளகமாக வைக்கப்பட்டால் ,மின்னிழை
விளக்கு பிரகாசமாக எரியுமா ? மங்கலாக எரியுமா ?
**************
மின் சுருளின் மின் நிலைமம் (Inductance ) இரும்புத் தண்டை
உள்ளகமாக வைக்கும் போது அதிகரிக்கின்றது
அதனால் மின் நிலைமத் தடை அதிகரிக்க , சுற்றில்
மின்னோட்டம் குறைகிறது. அதனால் மின்னிழை
விளக்கு மங்கலாக எரியும் எனலாம்

No comments:

Post a Comment