Thursday, September 22, 2011

arika iyarppiyal

இரு இழை விளக்குகளும் ஒளியியல் குறுக்கீட்டு விளைவும்


ஓர் ஒளி மூலத்திலிருந்து இரு ஒளிக் கற்றைகளைப் பிரித்து
அவற்றைக் குறுக்கிடச் செய்ய ஒளியியல் குறுக்கீட்டு வளைவு
(Interference ) தோன்றுகிறது.
இதில் சீரான தடிப்புடன் ஒளிச்செறிவு மிக்க ஒளிர் பட்டைகளும்,
இருள் பட்டைகளும் மாறிமாறி
காணப்படுகின்றன .இதைத் தோற்றுவிக்க ஓரியல் ஒளி(Coherent)
தேவை. அதாவது அவற்றின் அதிர்வெண்
சமாகவும் மாறாத தொடக்க நிலைக் கட்ட வேறுபாடும் ,
அலைவீச்சு சமாகவும் அல்லது ஏறக்குறைய சமமாகவும்
ஒரே அலைநீளமுள்ள ஒற்றை நிற ஒளியாகவும் ஒளி மூலம்
ஓரளவு குறுகியதாகவும் இருக்கவேண்டும் .
ஒரே மாதிரியான இரு 100 வாட் இழை விளக்குகளைக் கொண்டு
ஒளியியல் குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்த முடியுமா ?

ஒரே மாதிரியான விளக்குகள் என்றாலும் அவற்றின் ஒளி
ஒரே அதிர்வெண் உடையதாக இருப்பினும் ,அலைநீளம்
சமமாக இருப்பினும் அலைக் கட்ட வேறுபாடு
அதே அளவில் மாறாதிருப்பதில்லை.அதனால் இரு100வாட்
இழை விளக்குகளைக் கொண்டு ஒளியியல் குறுக்கீட்டு
விளைவை ஏற்படுத்த முடியாது .

ஒளிச்செறிவு வேறுபாட்டால் குறுக்கீட்டு விளைவு என்னவாகும் ?


குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்தும் இரு ஒளி மூலங்களில் ஒன்றின் ஒளிச்செறிவு ,பாதியளவு ஒளியை உட்புக அனுமதிக்கும்
பொருளால் பாதியாகக் குறைக்கப்பட்டால் ,ஓரியல் ஒளி மூலத்
தன்மை மாறுவதில்லை. அவற்றால் ஏற்படுத்தப்படும் குறுக்கீட்டு
விளைவு எப்படி இருக்கும் ?

இப்போதும் குறுக்கீடு விளைவுப் பாங்கு தோன்றினாலும்,
ஒளி மற்றும் இருள் வரிகளுக்கிடையே வேறுபாடும்
தன்மை குறைந்துவிடுகிறது. அதாவது இருள் வரிகள்
சற்று பிரகாசமடைகின்றன, ஒளி வரிகள் சற்று
மங்குகின்றன

No comments:

Post a Comment