Tuesday, September 20, 2011

கண்ணாடி வில்லையையும் குவியாடியையும் நீரில் வைத்தால்


கண்ணாடியாலான குவி வில்லை, ஒரு பக்கத்தில் விழும் ஒளியை மறு பக்கத்தில் ஒரு புள்ளியில் குவியச் செய்கிறது. விழும் ஒளி இணைக் கற்றைகளானால்,குவியும் புள்ளி குவி மையம் (focus ) எனப்படும் .குவி யாடி தன் மீது விழும் ஒளியை
எதிரொளித்து விரிந்து செல்ல வைக்கிறது. .கண்ணாடியாலான ஒரு குவி வில்லையையும் ,குவி யாடியையும் காற்றூடகத்திற்கு
பதிலாக நீரில் வைத்தால் என்ன மாற்றம் ஏற்படும் ?

ஆடியின் குவிய தூரம் ,அதைச் சுற்றியுள்ள ஊடகத்தால் பாதிக்கப்படுவதில்லை .ஆனால் குவி வில்லையின் குவிய தூரம்
சுற்றியுள்ள ஊடகத்தைப் பொறுத்திருக்கிறது .வில்லையை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்தால் ,அதன் குவிய தூரம் அதிகரிக்கிறது .
ஏனெனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் காற்றூடகத்தைவிட நீரூடகத்தைப் பொறுத்து குறைவாகிவிடுகிறது

No comments:

Post a Comment