Wednesday, September 14, 2011

vinveliyil ulaa

cetus (சீடஸ்)

இது கடலரக்கன் அல்லது திமிங்கிலம் போன்று தோற்றம் தரக்கூடிய ஒரு வட்டார விண்மீன் கூட்டம். இது விண்வெளியில் அதை அளவு இடத்தை
ஆக்கிரமித்துள்ள கூட்டங்களுள் ஒன்றாகும். இக் கூட்டத்தில் சுமார் 100 விண்மீன்கள் வெறும் கண்ணுக்குத் தென்படுகின்றன.
இவ் வட்டார விண்மீன் கூட்டத்தில் எந்த விண்மீன் மிகவும் பிரகாசமானது என்பதை அறிவதில் முதலில் ஒரு சிக்கல் எழுந்தது.ஏனெனில்
வெவ்வேறு நேரத்தில் இது வெவ்வேறு விண்மீனை பிரகாசமிக்கதாகக் காட்டியது. இதனால் சரியான முடிவு நெடுங்காலம் எட்டப்படாமல்
இருந்தது. சீடஸ் விண்மீன் கூட்டத்தில் ஒரு மாறொளிர் விண்மீன் பிரகாசமிக்க விண்மீனாகத் தோன்றிய காலத்தில் அதுவே அக்கூட்டத்தின்
பிரகாசமான விண்மீன் என்று தொடக்கத்தில் வரையறுக்கப்பட்டதின் விளைவே இது எனப் பின்னர் அறியப்பட்டது.

கலிலியோ காலத்திய ஒரு வானவியலார் டேவிட் பாபிரிசியஸ் (David Fabricius ) .அவருடைய காலத்தில் மிகச் சிறந்து விளங்கினார்
இந்த மாறொளிர் விண்மீனின் கண்டுபிடிப்பு அவரால் தற்செயலாக விளைந்தது . 1596 ம ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தின் மையத்தில்
டேவிட் பாபிரிசியஸ் புதன் கிரகத்தை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தார். .அப்போது தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டு பயனில்
இல்லாமலிருந்தது .சீடஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில் உள்ள தோற்ற ஒளிபொலிவெண் 3 ஆகவுள்ள ஒரு விண்மீனுக்கும்
புதன் கிரகத்திற்கும் இடையேயுள்ள கோணத் தொலைவை அலவிட்டறியும் முயற்சியில் இக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது .
சீடஸ் வட்டார விண்மீன் கூட்டம் பொதுவாக அதுவரை பிரகாசமான விண்மீன்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு முக்கியமான கூட்டமாக இல்லை
மேலும் அந்த வட்டாரத்தில் அவர் கண்டுபிடித்த அந்த விண்மீன் எந்தப் பட்டியலிலும் ,பதிவிலும் சுட்டிக் காட்டப்படவில்லை. அதனால் அந்த விண்மீன் அப்போது அவருக்குப் புதுமையாகவும் புதிராகவும் தோன்றியது. எனினும் நெடுந்தொலைவுகளில் உள்ள வட்டார விண்மீன்களின் பதிவுகள்
துல்லிய மற்றவையாக இருக்கலாம் என்பதாலும் மங்கலான விண்மீன்கள் பார்வையிலிருந்து தவறுவதற்கு வாய்ப்பிருப்பதால் .அவை விடுபட்டுப் போகலாம் என்பதாலும் அப்போது இதற்கு அவர் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை .எனினும் டேவிட் பாபிரிசியஸ் இந்த விண்மீனைத் தொடர்ந்து கண்காணிக்கத்
தவறவில்லை. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் அந்த விண்மீனின் தோற்ற ஒளிப் பொலி வெண் 2 ஆக மாறியது. ஆனால் செப்டம்பரில்
மங்கி ,அக்டோபரின் மையத்தில் சாதாரணக் கண் பார்வையிலிருந்து முற்றிலும் மறைந்து போனது அப்போது இது 1572 ல் டைகோ பிராகே கண்டறிந்த நோவா போல இதுவும் ஒரு நோவாவாக ,அதாவது மெதுவாக அழியும் ஒரு மாறொளிர் விண்மீனாக
இருக்கலாம் என்று தவறாக முடிவு செய்து அவ விண்மீனை மேலும் ஆராய்வதை விட்டுவிட்டார் .
ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1609 ல் ஜோகன் பேயர் (Johann Bayer ) என்பார் விண்மீன்களின் ஒளிப்படத் தொகுப்பைத் தயாரிக்கும் முயற்ச்சியில்
ஈடுபட்டு பல வட்டார விண்மீன் கூட்டங்களை மீண்டும் நுணுகி ஆராய்ந்தார். அப்போது சீடஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில்
டேவிட் பாபிரிசியஸ் என்பாரால் சுட்டிக்காட்டப் பட்ட அந்த விண்மீனின் தோற்ற ஒளிப் பொலி வெண் 4 எனக் குறிப்பிட்டு .அதற்கு உமிகிரான்(o ) சீடி
என்று பெயருமிட்டார் .
1638 ல் டச்சு நாட்டு வானவியலார் ஜோகன்ஸ் பொசைலிடஸ்(Johannes Phocylides ) என்பார் முத்த முதலாக இந்த விண்மீனின் மாறொளிரும்
தன்மையைக் கண்டுபிடித்தார் .முழுச் சந்திர கிரகணத்தின் போது கிடைத்த முழுமையான இருட்டில் இவ் விண்மீனை மீண்டும் ஆராய்ந்து அதன்
மாறொளிர் தன்மையை உறுதி செய்தார் .அதன்பின் இது முன்பு டேவிட் பாபிரிசியஸ் . பேயர் போன்றவர்களால் இனமரியப்பட்ட அதே
விண்மீன் என்றும் நிறுவினார் .17 ம் நூற்றாண்டின் மையத்தில் இந்த மாறொளிர் விண்மீன் நீண்ட காலச் சுற்று முறைக்கு உட்பட்டு
பிரகாசம் மாறிமாறி ஒளிரக் கூடிய ,அப்படி மாறும் அளவும் மிக அதிகமாக இருக்கக்கூடிய விந்தையான .வித்தியாசமான ஒரு விண்மீன் எனத் தெரிந்து கொண்டனர் /. 1648 ல் ஜெர்மன் நாட்டு வானவியலார் ஹெவிலியஸ் (Hevelius ) இவ் விண்மீனுக்கு மீரா (Mira ) எனப் பெயரிட்டார் .
நீண்ட காலச் சுற்று முறை கொண்ட மாறொளிர் விண்மீன்களுள் முதலில் கண்டுபிக்கப்பட்டது. இந்த மீரா. அதனால் அதன் பிறகு கண்டுபிக்கப்பட்ட
பல நீட காலச் சுற்று முறையுடன் ஒளிப் பொலி வெண்ணில் 2 .5 மாற்றம் ஏற்படுத்த க் கூடிய மாறொளிர் விண்மீன் களை மீரா வகை மாறொளிர் விண்மீன் கள் என்றே அழைக்கின்றனர் .பொதுவாக இந்த வகை விண்மீன்கள் குறைந்த புறப்பரப்பு வெப்பநிலை யுடன் குளிர்ச்சியான
பெருஞ்ச்சிவப்பு விண்மீனாக இருக்கும்

No comments:

Post a Comment