Sunday, September 25, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்

ஜி -10 நாடுகளின் வளர்ச்சித் திட்டம் குறித்த ஆலோசனைக்
கூட்டத்தில் பங்கேற்று ப் பேசிய நமது நிதி அமைச்சர்
பிரணாப் முகர்ஜி அவர்கள் வளரும் நாடுகளுக்கு உலக
வங்கி கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார் .
கூடுதல் நிதி பலமுறை வாங்கி அதை இந்தியா சரியாகப்
பயன்படுத்திக் கொண்டதா ? அப்படி வாங்கப் பட்ட
நிதி முறையாக உண்மையான திட்டங்களில் செலவழிக்கப்
படாமல் பலருடைய பாக்கெட்டுகளில் போய் முடங்கியதால்
கறுப்புப் பணமாக் வெளி நாடுகளில் பதுக்கப் பட்டது .நிதி
உதவி கேட்பதற்கு முன்னர் அது எதற்காகக் கேட்கப் படுகிறது
அதற்கு உண்மையில் எவ்வளவு செலவாகும் ,அதை நடை
முறைப்படுத்துவதற்கான வழி முறைகள் யாவை ,பணம்
சரியாக திட்டங்களில் செலவழிக்கப் படுகிறதா என்பதற்கு
கண்காணிப்பு போன்றவை வலுவாக இருக்க வேண்டும்
காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஊழல்,
ஆதர்ஷ் காலனி ஊழல் ,2ஜி அலைக் கற்றை ஊழல்
இப்படி ஊழல் எல்லை இன்றி விரிந்து செல்ல நிதி உதவியைப்
பயன் படுத்திக் கொள்ளக் கூடாது .
வெறும் திட்டங்களை முன் மொழிவதாலும் அதை
அரைகுறையாக கால தாமதத்துடன் பலவீனமாக
நிறைவேற்றுவதாலும் அது மக்களின் வளர்ச்சிக்கும்
நலத்திற்கும் நன்மை பயக்கும் அணுகுமுறையாக இருக்காது.
மக்களுக்கு வேண்டியது அவர்கள் மகிழ்ச்சியாகவும் ,
ஏற்றத் தாழ்வின்றி சமுதாயத்தோடு ஒற்றுமையாகவும் ,
பயமின்றி நேர்மையாகவும் வாழ சம வாய்ப்புகளே .
நாளைக்கு என்று என்றைக்குமே கிடைக்காத அறு சுவை
உணவு வேண்டாம் ,
இன்றைக்கு குடிக்க நிச்சியமான கஞ்சி கிடைத்தால் போதும்

No comments:

Post a Comment