Sunday, June 10, 2012

கார்ட்டூன் கோடை விடுமுறையை வெட்டிப் பொழுதாய் கழித்துக் கொண்டிருந்த தன் மகனைப் பார்த்து அப்பா அப்பா: உருப்படியாக ஏதாவது செய்யக்கூடாதா ? மகன் : எப்போதும் குறையாகவே சொல்லாதிங்கப்பா .நீங்கள் என்றைக்கு என் சாமர்த்தியத்தைப் பற்றி மெச்சி இருக்கிங்க. அப்பா: அப்படி என்ன சாதித்து விட்டாய் ? மகன் : காலையில் படுக்கை விட்டு 7 மணிக்கு எழுந்தேன் .பல் துலக்கி, குளித்து தலை சீவி புத்தாடை அணிந்து கொண்டேன். அம்மா தந்ததைச் சாப்பிட்டேன் .சப்தம் போட்டால் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் வெளியில் போய் விளையாடினேன் கரண்டு பில் எகிறுடும் என்பதால மின் விசிறி ,ac கூட பயன்படுத்த வில்லை அப்பா : அன்றாடக் கடமைகளெல்லாம் சாதனையாகி விடுமா ? மறைந்திருக்கும் உண்மை : நாட்டின் தலைவர்கள் எல்லாம் இப்படித்தான் தங்கள் இயல்பான கடமைகளையெல்லாம் தியாகமாகவும் ,சாதனைகளாகவும் சொல்லிக் கொள்கின்றார்கள்.நீ பரிசுப் பொருளை வாங்கி அவர்கள் கையால் கொடுத்தால் அவர்கள் ஒளிப் படம் எடுத்துக் கொள்கிறார்கள் வீடே நாடு நாடே வீடு .

No comments:

Post a Comment