Friday, June 15, 2012

Eluthatha Kaditham

எழுதாத கடிதம் மதுரை ,அரவிந்த் கண் மருத்துவ மனையில் என் மனைவிக்கு கண் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்று டவுன் பஸ்ஸில் மாட்டுத் தாவணிக்கு வந்து கொண்டிருந்தேன்.இடையில் ஒரு நிறுத்தத்தில் ஒரு பெண்ணும் காக்கிச் சட்டை போட்ட ஒரு போலிஸ்காரரும் ஏறினர்.நடத்துனர் அந்தப் பெண்ணுக்கு மட்டும் டிக்கெட் கொடுத்து சில்லரை வாங்கினார். போலிஸ்காரரிடம் டிக்கெட் கேட்கவில்லை ஏன் அவர் அருகில் கூடச் செல்லவில்லை.பஸ்சுக்குச் சொந்தக்காரர் போல ஏறினார் இறங்கும் இடம் வந்ததும் நன்றிகூடச் சொல்லாமல் இறங்கினார். போலிஸ்காரரும்,நடத்துனரும் நடந்து கொண்ட விதம் இது வழக்கமாக நடப்பதுதான் என்பதைச் சுட்டிக் காட்டியது.இதைப் போல நான் பலமுறை பலவிடங்களில் கண்டதுண்டு. போலிஸ்காரரும் நடத்துனரும் அவரவர் கடமைகளைச் செய்யத் தவறுகின்றனர் என்பதறிந்து ஒவ்வொரு முறையும் மனம் வருந்துவேன். இந்த முறை அதைச் செய்தியாகப் பதிவு செய்கிறேன்.டிக்கெட்டை கேட்டுப் பெறவும் என்ற விளம்பரம் பஸ்ஸில் பயணம் செய்யும் சாதாரண மக்களுக்கு மட்டும் தான் போலும். ஒரு பொது இடத்தில் எல்லோருடைய கண் பார்வையில்,சட்டத்திற்கு காவலராக இருக்கும் ஒரு போலிஸ்காரர் இப்படி நடந்து கொள்வது சட்டத்தையே அவமதிப்பது போலத் தான். நடத்துனரும் ஏன் தன் கடமையைச் செய்யத் தவறுகிறார் எனத் தெரியவில்லை டிக்கெட் கேட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டு தன் மீது என்றைக்காவது ஒருநாள் பொய் வழக்குப் போட்டு விடுவாரோ என்று நடத்துனர் பயப்படுகின்றாரோ இல்லை நாம் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களைக் கண்டுபிடித்து கோர்ட்டுக்கு அலைய விட்டு விடுவார் என்றோ பஸ்ஸில் இலவசமாக பயனிக்க அனுமதித்தால் இன்றில்லா விட்டாலும் என்றைக்காவது ஒருநாள் நன்றிக் கடனாக உதவுவார் என்றோ அப்படிச் செய்தாரோ .டிக்கெட் கேட்டுப் பெறாமல் இலவசமாகப் பயணம் செய்தது போலிஸ் காரர் செய்யும் தப்பு ,டிக்கெட் கொடுக்காமல் போலிஸ் காரரை பயணம் செய்ய அனுமதித்து நடத்துனர் செய்யும் தப்பு. தப்புகள் மக்கள் கண்முன்னே வளரும் போது இனிய சமுதாயம் என்பது வெறும் கனவாய்ப் போய்விடாதா . அரசுக்கு இதனால் பெரிய அளவில் இழப்பு வருமே .போக்கு வரத்துக் கழகங்கள் தான் இந்த இழப்பைக் கணக்கிட்டு அறிவிக்க வேண்டும் போக்கு வரத்துக் கழகங்கள் பயந்தால் ,அரசு சில நடவடிக்கைகள் எடுக்க முன் வரவேண்டும் . போலிஸ் காரர்களும் தங்கள் பயணத்திற்கு உரிய சீட்டு பெறவேண்டும் என்ற விளம்பரத்தை பஸ்ஸில் வைக்கலாமே .அல்லது போலிஸ் காரர்களுக்கு பல சலுகைகள் வழங்கியதைப் போல இதையும் ஒரு சலுகையாக வழங்கிவிடலாம். போலிஸ் காரர்களும் தங்கள் கண் முன்னே தவறு செய்கிறார்கள் என்று அப்போது மக்கள் நினைக்க மாட்டார்கள்.காவல் துறையும்.போலிஸ் காரர்கள் பயணம் செய்யும் போது டிக்கெட் வாங்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும் .

No comments:

Post a Comment