எழுதாத கடிதம்.
படித்தவர்கள் ,பண்புள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று மேடைகளில் அழைப்பு விடுப்பார்கள் மூத்த இந்திய அரசியல் வாதிகள். இளைஞர்கள் தீவிர அரசியலுக்கு வந்து மக்களிடையே விரைவான செல்வாக்குப் பெற்று விட்டால் அனுபவம் போதாது என்று ஓரங்கட்டப் பார்ப்பார்கள்.இவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அனுபவம் நெடு நாளாகியும் மக்களுக்கு குறிப்பிடும் படியான எந்த நன்மையையும் செய்யவில்லை.மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படும் போது ,அவர்கள் மாற்றி யோசிக்கத் துணிவு கொள்கின்றார்கள் அப்துல் கலாம் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு மனிதர்.அவர் ஒரு விஞ்ஞானி என்றாலும் மக்களுக்கெல்லாம் ஒரு சிறந்த தலைவராக இருக்கமுடியும் என்பதை வெகு இயல்பாக எடுத்துக் காட்டியவர்.நேர்மையோடு பணியாற்றக் கூடியவர்.பதவி மீது ஆசை இல்லாதவர்,பதவியைத் தன்னுடைய நலனுக்காகவும் தன் உறவினர் நலனுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள மறுப்பவர் நாட்டின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டு உருப்படியான கருத்துக்களையும் ,திட்டங்களையும் எடுத்துச் சொன்னவர். இந்தியாவை ஒரு வல்லரசாக உயர்த்தி உலகிற்கு காட்ட முடியும் என்ற கனவை இளைஞர்களின் எண்ணத்தில் விதைத்து நம்பிக்கையை வளர்த்துக் காட்டியவர். அரசுக்கு தலையாட்டிப் பொம்மை இல்லை அரசை விட மக்கள் நலம் விரும்பியாக இருக்கிறார் என்பதற்காக
மக்களால் விரும்பப் படும் ஒருவரை மீண்டும் ஜனாதிபதியாக வராமல் இருப்பதற்கு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் தடையாக இருப்பது இந்தியாவின் தூரதிர்ஷ்டமே. அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது அவர் மீண்டும் சிறந்த ஒரு ஜனாதிபதியாக இருப்பதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டார்.அவருடைய அனுபவம், அறிவு , வழிகாட்டல் நேர்மை ,இவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டுவேறொருவரை போட்டியாளராக நிறுத்துவது இந்திய மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பானதே. ஜனாதிபதி என்பவர் ஒரு நடு நிலையாளராக இருக்கவேண்டும் .பிரணாப் ஒரு காங்கிரஸ் வாதி. காங்கிரஸ் கட்சியால் வளர்ந்தவர். ஒருவேளை எதிர்க் கட்சி ஆட்சிக்கு வந்தால் தொடர்பு எப்படி இருக்கும். ஜனாதிபதி என்பவர் மக்கள் நலம் விரும்பியாக இருக்க வேண்டும். துண்டு விழுகிறது என்பதற்காக சேவை வரியை உயர்த்தியவர் பிரணாப் .விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த முடியாமல் தடுமாறியவர். பண வீக்கத்திற்கு மக்களையே சுட்டிக் காட்டுபவர்.சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை முடக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட விரும்பாதவர் படித்தவர்களும் பண்புள்ளவர்களும் அரசியலுக்கு வந்தால் அது வீழ்ந்து வரும் இந்தியாவிற்கு நல்லது என்று எண்ணி வழி விடுகள்.அது நீங்கள் இந்தியாவிற்கு செய்யும் மிகப் பெரிய சேவையாக இருக்கும்.
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Friday, June 22, 2012
Eluthatha kaditham
எழுதாத கடிதம்.
படித்தவர்கள் ,பண்புள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று மேடைகளில் அழைப்பு விடுப்பார்கள் மூத்த இந்திய அரசியல் வாதிகள். இளைஞர்கள் தீவிர அரசியலுக்கு வந்து மக்களிடையே விரைவான செல்வாக்குப் பெற்று விட்டால் அனுபவம் போதாது என்று ஓரங்கட்டப் பார்ப்பார்கள்.இவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அனுபவம் நெடு நாளாகியும் மக்களுக்கு குறிப்பிடும் படியான எந்த நன்மையையும் செய்யவில்லை.மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படும் போது ,அவர்கள் மாற்றி யோசிக்கத் துணிவு கொள்கின்றார்கள் அப்துல் கலாம் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு மனிதர்.அவர் ஒரு விஞ்ஞானி என்றாலும் மக்களுக்கெல்லாம் ஒரு சிறந்த தலைவராக இருக்கமுடியும் என்பதை வெகு இயல்பாக எடுத்துக் காட்டியவர்.நேர்மையோடு பணியாற்றக் கூடியவர்.பதவி மீது ஆசை இல்லாதவர்,பதவியைத் தன்னுடைய நலனுக்காகவும் தன் உறவினர் நலனுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள மறுப்பவர் நாட்டின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டு உருப்படியான கருத்துக்களையும் ,திட்டங்களையும் எடுத்துச் சொன்னவர். இந்தியாவை ஒரு வல்லரசாக உயர்த்தி உலகிற்கு காட்ட முடியும் என்ற கனவை இளைஞர்களின் எண்ணத்தில் விதைத்து நம்பிக்கையை வளர்த்துக் காட்டியவர். அரசுக்கு தலையாட்டிப் பொம்மை இல்லை அரசை விட மக்கள் நலம் விரும்பியாக இருக்கிறார் என்பதற்காக
மக்களால் விரும்பப் படும் ஒருவரை மீண்டும் ஜனாதிபதியாக வராமல் இருப்பதற்கு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் தடையாக இருப்பது இந்தியாவின் தூரதிர்ஷ்டமே. அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது அவர் மீண்டும் சிறந்த ஒரு ஜனாதிபதியாக இருப்பதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டார்.அவருடைய அனுபவம், அறிவு , வழிகாட்டல் நேர்மை ,இவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டுவேறொருவரை போட்டியாளராக நிறுத்துவது இந்திய மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பானதே. ஜனாதிபதி என்பவர் ஒரு நடு நிலையாளராக இருக்கவேண்டும் .பிரணாப் ஒரு காங்கிரஸ் வாதி. காங்கிரஸ் கட்சியால் வளர்ந்தவர். ஒருவேளை எதிர்க் கட்சி ஆட்சிக்கு வந்தால் தொடர்பு எப்படி இருக்கும். ஜனாதிபதி என்பவர் மக்கள் நலம் விரும்பியாக இருக்க வேண்டும். துண்டு விழுகிறது என்பதற்காக சேவை வரியை உயர்த்தியவர் பிரணாப் .விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த முடியாமல் தடுமாறியவர். பண வீக்கத்திற்கு மக்களையே சுட்டிக் காட்டுபவர்.சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை முடக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட விரும்பாதவர் படித்தவர்களும் பண்புள்ளவர்களும் அரசியலுக்கு வந்தால் அது வீழ்ந்து வரும் இந்தியாவிற்கு நல்லது என்று எண்ணி வழி விடுகள்.அது நீங்கள் இந்தியாவிற்கு செய்யும் மிகப் பெரிய சேவையாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment