Saturday, June 2, 2012

social awareness- Mind without fear

உங்களோடு கொஞ்ச நேரம் மாணவர்களே. ஆசிரியர்கள் உங்கள் எதிரிகள் இல்லை.அவர்கள் உங்கள் எழுச்சிக்காக ஒவ்வொரு நிமிடமும் செலவழிக்கின்றார்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள பிணைப்பு உறுதியானது மட்டுமில்லை உண்மையானதும் கூட.சொல்லப்போனால் நீங்கள் வாழ்க்கையைத் திட்டமிடும் காலத்தில் உங்களோடு அதிகம் தொடர்புடையவர்களாக இருப்பது ஆசிரியர்கள் தான்.அந்த வகையில் மாதா,பிதாவை விட குருக்கள் முக்கியமானவர்களாக இருக்கின்றார்கள்.மாணவர்கள்-ஆசிரியர்கள் நட்பும் உறவும் எவ்வளவு உண்மையானதாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு இருவர் நலமும் உண்மையானதாக இருக்கும். நாங்கள் ஒரு மாணவன் கல்வி அறிவைப் பெற்று திறமையானவனாக வெளியேறி வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதையே விரும்புகிறோம்.உங்களுடைய நோக்கமும் அதுவாக இருந்து விட்டால் நாங்கள் எங்கள் முயற்ச்சியில் பாதி வெற்றி பெற்றது மாதிரித்தான்.அப்படி இல்லாத போது நம்முடைய உன்னதமான உறவில் விரிசல் ஏற்பட்டு விடுகிறது.அதைச் சரி செய்ய வேண்டிய கடமையும் எங்களுக்கு இருக்கிறது.அந்த நோக்கத்தில் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் சோர்விலா மனம்(Mind without depression) என்ற பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. அதன் நோக்கத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வது நலம் தரும் என்பதால் அதுபற்றி விரிவாகப் பேச விழைகிறேன் கற்கும் கல்வியோடு வாழ்க்கையின் போக்கை எடுத்துச் செல்லும் போது நீங்கள் எதையுமே வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. அதனால் எந்த இடையூறும் ஏற்பட வழியில்லை.ஆனால் இதில் முரண்பாடு எழும்போது ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்று உணர்வீர்கள் .அப்போது நீங்கள் சோர்வினால் சொல்லொண்ணா வலியை உணர்வீர்கள். அது உங்கள் வாழ்கையில் போக்கை நிமிடத்தில் தடம் புரட்டிப் போட்டு விடுகிறது. நீங்கள் எங்களை விட்டு விலகிச் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு நீங்களும் வேண்டும் .உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்களை நாங்கள் அறியப் புறப்பட்டு விட்டோம். மாணவர்களே உங்களுக்கு இதன் மூலம் நான் சொல்லும் முதல் அறிவுரை என்னவென்றால் Don't hold strong opinions about things you don 't understand உங்களுக்குப் புரியாதைப் பற்றி அதிகம் பேசாதீர்கள்.அப்படிப் பேசுவீர்களே ஆனால் நீங்கள் heroism என்ற தவறான வழியில் உங்களை அறியாமலேயே நடைபோடத் தொடங்கி விட்டீர்கள் என்பது உண்மையாகும். heroism என்பது உண்மையான கருத்துக்களின் வெளிப்படில்லை போலியான ஒருவரை உயர்வாக உயர்த்திப் பேசி ஆதாயம் தேடுவதும்,தன்னை ஒரு அறிவாளி என்று பிறர் நினைக்க வேண்டும் என்பதற்காக தெரியாத விசயங்களைப் பற்றி பேசுவதும், heroisam வளர்ச்சி பெறுவதற்கு தூண்டுதலாக இருக்கிறது .இது தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் காரணங்களில் முதன்மையானதாக் இருக்கிறது. இதை முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள் தொடரும் .....

No comments:

Post a Comment