Friday, May 10, 2013




Cartoon
இடைத் தேர்தல்ல அமோக வெற்றி பெற்றார் .அந்தோ பரிதாபம் ஆட்சி ஆறேமாதத்தில்  கவிழ்ந்து போனது .அப்புறம் வந்த பொதுத் தேர்தல்ல படு தோல்வி அடைந்தாரே ஏன் ?
போன தேர்தல்ல மனைவி இல்லாதவர்களுக்கு  மனைவி இலவசம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.ஜெய்த்தார் .அதை நிறைவேற்ற முடியாமப் போனதால் தோற்றுப்போனார்.
எதைத்தான் இலவசமாகக் கொடுக்கிறது .கொஞ்சங் கூட விவஸ்த்தையேயில்லை.
மக்களிடம் அபிமானத்தைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கவேண்டும் .ஆட்சியில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் அரசியல் நாகரிகத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள் .பின்னொரு காலத்தில் இதை நிறுத்தி விடுவதை மக்கள் ஏற்றுக்க கொள்ளவே மாட்டார்கள் .அதனால் ஆதாயம் பெறாத மக்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் .ஆதாயம் அடைந்தவர்கள் வேறு பல இலவசங்களை வேண்டிப் போராடுவார்கள் . மக்களுக்கு எது தேவையோ  அதை அவர்கள் தங்கள் உழைப்பால் பெறுவதுதான் உண்மையான வளர்ச்சி .இல்லையேல் அதுவும் ஒருவகையில் இகழ்ச்சிதான் .உழைத்து சம்பாதிக்கும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதே தொலை நோக்குப் பார்வையுடைய ஆட்சியாளர்களுக்கு அழகு .

No comments:

Post a Comment