Friday, May 17, 2013

Kavithai



நீ மட்டுமேன் முயலவில்லை
முளைக்க முயலாத விதையில்லை
விரிக்க முயலாத இதழில்லை
பாட முயலாத குயிலில்லை
ஆட முயலாத மயிலில்லை

ஓட முயலாத மானில்லை
தாவ முயலாத குரங்கில்லை
பறக்க முயலாத பறவையில்லை
நீந்த முயலாத மீனில்லை

இயற்கையின்றி செயற்கையில்லை
விளக்கின்றி வெளிச்சமில்லை
வெயிலின்றி நிழலுமில்லை
சிறிதும் முயற்சியின்றி விடியலில்லை

சிகரம் தொட நீ மட்டுமேன் முயலவில்லை



No comments:

Post a Comment