Thursday, June 7, 2012

social awareness -Mind without fear

மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம். வில்மா ருடோல்ப் (Wilma Rudolph) 1940 ல் பிறந்து 54 ஆண்டுகள் வாழ்ந்த இவருடைய வாழ்க்கை நமெக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்கிறது.இவருடைய வாழ்க்கை வரலாற்றை படிப்பீர்களேயானால் நாம் நமக்குக் கிடைத்த மேலான வாழ்க்கையை எவ்வளவு வீணாக்கி விட்டோம் என்பதை உணர்வீர்கள் . தகர்க்க முடியாத தடைகள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டு முடியாததை முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். உடல் ஊனமுற்றோர் பெரும்பாலும் மனச் சோர்வுற்று எதையாவது சாதிக்க வேண்டும் என்று துணிய மாட்டார்கள் . சில சமயங்களில் தவறான முடிவுகளை மேற்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிவார்கள் .உடல் ஊனமாக இருந்தாலும் இவர் தன்னை ஒரு மாற்றுத் திறனாளியாக வெளிப்படுத்திக் காட்டினார். அதற்காக அவர் வெகு இயல்பபாக எடுத்துக் கொண்ட முயற்சிகள் தவறான முடிவுகளை நாம் தவறுதலாக மேற்கொள்ளத் துணியும் போது சித்திக்கத் தூண்டுகின்றன. குறைப் பிரசவத்தில் பிறந்ததால் பிறக்கும் போதே எடை குறைவாகவும் , சரியான வளர்ச்சி யின்றியும் இருந்தார். 4 வயதில் போலியோவால் பாதிக்கப் பட்டு காலின் வலிமையை இழந்தார். நடக்கக் கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். எல்லோரையும் போல பள்ளிக்குச் சென்று கல்வியும் கற்க முடியவில்லை. அவரின் தந்தை ரயில் நிலையத்தில் ஒரு கூலி தாய் ஒரு தாதி. போதிய வசதியின்மையால் முழுமையான சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியவில்லை. வலுவூட்டுவதற்காக கால்களில் இரும்பு வளையங்களைப் பொருத்தி இருந்தார்கள். அதனால் அதிகத் தூரம் நடப்பது கூடச் சிரமமாக இருந்தது. கால்கள் வளைந்திருப்பதைத் தடுப்பதற்காக கனமான ஷூ வேறு அணியவேண்டி இருந்தது . ஒரு சமயம் அவருடைய மருத்துவர் .வில்மாவால் இனி நடக்கவே முடியாது என்று தெரிவித் து அவரால் என்ன இயலுமே அதைமட்டும் வீட்டில் இருந்து கொண்டு அம்மாவின் உதவியோடு செய்யலாம் என்றார். வீட்டிற்கு வந்தவுடன் அம்மா கேட்டாள் "வில்மா நீ என்ன செய்ய விரும்புகிறாய் ?" அதற்கு வில்மா என்ன சொன்னால் தெரியுமா . "அம்மா நான் ஒரு ஓட்டப் பந்தைய வீராங்கனையாக விரும்பிகிறேன் " என்றாள்.போலியோவால் சுருக்கிப் போன கால்களுடன் இது இயலுமா என்று நாம் நகைக்கலாம் .ஆனால் அப்போது அவளுடைய அம்மா தந்த உற்சாகம் அவளுடைய தலை விதியையே மாற்றி அமைத்து விட்டது. உண்மைதான் ஒரே ஒரு வினாடி போதும் ,அதற்குள் வாழ்கையை முடித்துக் கொள்ளாலாம் என்ற எண்ணத்தை நிலைப்படுத்திக் கொள்ளலாம் அதுபோல வாழ்க்கையை மேம்படுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தையும் வலுப்படுத்திக் கொள்ளலாம் எல்லாவற்றிற்கும் மனமே காரணமாயிருகிறது.மனம் உறுதியாக இருந்தால் எதுவும் சாத்தியமே . ஏனெனில் இரு வேறுபட்ட எண்ணங்களும் ஒரே மனதிலிருந்து தான் வெளிப்படுகின்றன சரியாக நடக்கவே முடியாத வில்மா ஓடுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டார். தன்னுடைய 16 வது வயதில் மெல்போன்.நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாகக் கலந்து கொண்டார். அவருடைய மனம் தளராத முயற்சி அவருக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது அத்துடன் அவர் நின்று விடவில்லை. 1960 ல் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு 100 மீ .200 மீ ஓட்டம் ,4 x 100 மீ தொடர் ஓட்டம் என மூன்று போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். இது உலக சாதனையாகும் .இயற்கையே தனக்கு எதிராக இருந்தும் அதை எதிர்த்து வெற்றி வாகை சூடியவர் இந்த வில்மா . சின்னச் சின்ன த் தடைகளுக் கெல்லாம் சோர்ந்து போய் சும்மாவே இருக்கும் நமக்கு இவர் ஒரு உந்தற் காரணி. . . வில்மாவின் மறக்க முடியாத பொன் மொழிகள் சில Believe me, the reward is not so great without the struggle. The trumph can’t be hard without the struggle I believe in me more than anything in the world. I don’t know why I run so fast, I just run. Never underestimate the power of dreams and the influence of the human spirit. Sometimes it takes years to really grasp what has happened to your life

1 comment: