Sunday, April 7, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 27

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி? 
நல்லனவற்றை மறப்பதால் மறதி கேட்டது , தீயன வற்றை மறப்பதால்  மறதி நல்லது . எனவே மறதியை வேண்டாம் என்றோ , வேணும் என்றோ  முடிவு செய்யமுடியாது . மாணவர்களுக்கு கற்பதில் நினைவாற்றலின்றி ஏற்படும் மறதி அவர்களுடைய திறமையை மட்டுப்படுத்தி விடுகின்றது. நினைவாற்றல் மனதின் நலத்தோடு தொடர்புடையது. 
பொதுவாக  மனத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தோரிடம்  நினைவாற்றல் அதிகம் காணப்படுகின்றது . முன் திட்டமிட்டு ஒவ்வொரு செயலையும் நிதானமாகவும் உறுதியாகவும்,அமைதியாகவும் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்களிடம் நினைவாற்றல் மிகுந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.அதிகம் அலட்டிக் கொள்ளாதவர்கள்,அதிகம் ஆசைப்படாதவர்களிடம் நினைவாற்றல் குறைவதில்லை . மனம் ஒரே சமயத்தில் பலவற்றை விரும்பும் போது அவற்றில் ஒன்று கூட முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாததால் , விரைவில் மறந்து போகும் நிலையே ஏற்படுகின்றது .நல்லொழுக்கங்களை சிறிதும் வழுவாமல் கடைப்பிடிப்பவர்களிடம் நினைவாற்றல் மங்கிப் போய்விடுவதில்லை .  உயிரியல் விஞ்ஞானிகள்  இதற்கு அடிப்படையான காரணத்தைக் கண்டறிந்துள்ளார்கள். மீண்டும் நினைவுபடுத்திப் பயன் பெறவேண்டிய எண்ணத்தை பயனில்லாத ,வேண்டாத வேற்று எண்ணங்களே 'வைரஸ் ' கிருமிகள் போல காலப் போக்கில் அழித்து விடுகின்றன.
நல்லறிவைப் பெற வேண்டும் என்று சொன்ன சான்றோர்கள் அறிவுரை கேட்டு திருக்குறள் ,அகராதி போன்ற பல நன்னூல்களை வாங்கி வைத்திருப்போம் .அதன் பயனை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பைத் தேடி விரும்பாத போது அந்த நூல்கள் இடம் மாறி காலப் போக்கில் மாயமாய் மறைந்து போகும் . மனதில் இருக்கும் எண்ணங்களும் இப்படித்தான்.பிற்பயன் கருதி நினைவில் பதியவைத்துக் கொண்ட நல்ல எண்ணங்களை மனத்தைக் கட்டுப்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் தவறான வேற்று எண்ணங்கள் பதிவைத் திருடி மெல்ல மெல்ல அழித்து விடுகின்றன .இது நினைவாற்றலை இழப்பதாகும் .நினைவாற்றலை மேம்படுத்த மேற்கொள்ளும் பயிற்சிகளுள் முக்கியமானது நம் மனதை நாமே கட்டுப்படுத்தி சரியான தேவையான எண்ணங்கள் அழிந்து போய்விடாமல் பாதுகாப்பாகப் பதிவு செய்வதாகும் ஒரு சமயத்தில் ஒன்றைப் பதிவு செய்தால்தான் வலிமையாக ப் பதிவு செய்யமுடியும் என்பதைத் தெரிந்திருந்தும் நாம் செய்யும் பெரிய தவறே இது.
வாழ்க்கையை நம்மோடும் வாழ்க்கைப் பயனைப் பிறரோடும் தொடர்பு படுத்தி வாழும் போக்கை நெறிப் படுத்திக் கொண்டால் நினைவாற்றால் மேம்படும் .மற்றவர்கள் மீது பொறாமை கொண்டு அவர்களைப் பற்றித் தவறாக நினைக்கும் போது ஒவ்வொருவரும் தங்களையே மறந்து விடுகின்றார்கள்.அவர்கள் அவர்களாக இல்லாமல் எண்ணப்படும் எந்த எண்ணங்களும் அவர்களுக்கு உதவுவதில்லை. 

No comments:

Post a Comment