Sunday, April 28, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 46

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
பயன் முழுதும் தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று உள்ளூர விரும்புவதால் பிறருடன் இணைந்து செய்ய வேண்டிய வேலைகளையும் தனித்தே செய்ய முற்படுகின்றோம் . நாம் எப்படி பிறருக்கு விளைபயன்களைக் கொடுப்பதை விரும்பவில்லையா அது போல பிறரும் நமக்குக் கொடுப்பதை விரும்புவதில்லை . கொடுப்பதால் நமக்கு ஏற்படும் இழப்பைவிட பெறாமல் போவதால் ஏற்படும் இழப்பு அதிகம்  என்பதால் இணைந்து செயலாற்ற வேண்டிய சூழ்நிலைகளில் இணைந்து செயல்படவேண்டும். 
மேலும் இதனால் வேலைகள் பயனுறுதிறனுடன் முழுமை பெறாமல் போபவதற்கும்  கால தாமதத்துடன் முடிப்பதற்கும்  வாய்ப்பு ஏற்படுகின்றது . இணைந்து செயலாற்றும் போது நட்பு வலுப்பெறுகிறது .ஆக்கப்பூர்வமான  புதிய நட்புகளும் பயன்தருகின்றன. போலித்தனமில்லாத இந்த நட்பு  வாழ்க்கை முழுவதற்கும் இனிமையையும் மகிழ்ச்சியையும் தருகின்றது. உதவி செய்வதற்கும் உதவி பெறுவதற்கும் கூடுதல் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடிகின்றது .
இணைந்து செயலாற்றுவது பல நன்மைகளைக் கொண்டுள்ளது . முதலாவது  நேரம் மிச்சமாவதால் வேறு வேலைகளைச்  செய்ய தேவையான நேரம் கிடைக்கின்றது . இரண்டாவது கூட்டு முயற்சியில் எல்லோருடைய அறிவும் திறமையும் ஒன்று திரண்டு சங்கமிக்கின்றன.அதனால் வேலையை  பிழையின்றி பயனுறுதிறனுடன் செய்து முடிக்கும்  நிலை ஏற்படுகின்றது.
வேலை தெரியாதவர்கள் இருக்கலாம் ஆனால் வேலை இல்லாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.ஊதியத்திற்காகச் செய்வதுதான் வேலை என்பதல்ல , நாமே மேற்கொள்ளும் கடமைகளும் வேலைதான் .  பலர் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை என்று பொழுதை வீணாகக் கழித்து விடுகின்றார்கள் .தன்னுடைய அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புத் தேடவும் . பிறருக்கு உதவி செய்யவும்,  சமுதாயத்தின் நலத்தைப் பாதுகாக்கவும் , நாட்டின் வளத்தை மேம்படுத்தவும்  ஒவ்வொரு குடிமகனும் செய்யவேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றன .இதை இனமறிந்து கொள்ள மனம் காட்டும் தயக்கமே வேலையில்லை என்று ஒப்புக்கொள்ளச் செய்துவிடுகிறது  உண்மையில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை முழுதும் செய்வதற்கு வேலைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. பலர்  வேலைக்காக ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் , ஓய்வுக்காக வேலைசெய்யும் நாகரீகத்தை உட்புகுத்தி வருவதால் தனிமனிதனின் கடமைகள் செய்யப்படாமலே இருக்கின்றன  .
வேலை ஏதுமில்லை என்று நினைக்கும் நேரத்தில் மாணவர்கள் தங்கள் துணைத்  திறமைகளை  வளர்த்துக் கொள்ள வேண்டும்    

No comments:

Post a Comment