Saturday, April 27, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? -44

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
பெற்றோர்களின் கவனிப்பு , அக்கறை  மற்றும் வழிகாட்டலுடன் வளர்ந்த குழந்தைகளில் 95 சதவீதம் பேர் வாழ்க்கையில் தோற்றுப்போனதில்லை .பயனுறு திறன்மிக்க வாழ்க்கையை தன்வசப் படுத்திக் கொள்கின்றார்கள் . பெற்றோர்களால் அக்கறை காட்டப்படாத அல்லது  தவறாக அக்கறை காட்டப்பட்ட குழந்தைகள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்ததே இல்லை. இடையில் எதாவது  மாற்றம்  நிகழ்ந்தலேயொழிய அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதில்லை.பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ப் பள்ளியில் சேர்த்து விடுவதோடு சரி. அதன் பின்னர் குழந்தைகளின் கல்வித் பயணம் ஆசிரியரோடு மட்டும் தொடருகின்றது .ஒரு ஆசிரியர் பள்ளியில் பல மாணவர்களுக்கும் பொதுவானவராக இருப்பதால் தனிப்பட்ட முறையில் ஒரு மாணவரிடம் மட்டும் அக்கறை காட்டமாட்டார்.         
கவனிப்பு என்பது ஒவ்வொரு முறையும் தவறான வழியில் சென்றுவிடாமல் ,திட்டமிட்ட சரியான வழியில் மேற்கொள்ளும் முன்னேற்றத்தை க் கண்காணித்தலாகும். வழிமாறிச் செல்லும் போது  கண்டிப்பை விட அன்பான அறிவுரை அதிகப் பலன்தரும் .கடுஞ் சொற்கள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.  கண்காணிக்கின்றோம் என்பது குழந்தைகளுக்குத் தெரியாமலே கண்காணித்தல்  அவர்களுடைய சுயமதிப்பிற்கு பங்கம் ஏற்படுத்தாது .  குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள் அக்கறை கொண்டிருப்பதை அவர்கள் உணருமாறு செய்யவேண்டும் .
அக்கறை என்பது குழந்தைகளுடன் ஒவ்வொருநாளும் கொஞ்ச நேரம் இருப்பது மட்டுமில்லை , அவர்களுக்குப் புரியாத பாடங்களைச் சொல்லிக் கொடுக்கலாம், கல்வி சம்பந்தமான அறிவுரைகளை க் கொடுக்கலாம். பொது அறிவியல் பற்றி விளக்கங்களை விவரிக்கலாம் . வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தரலாம்.
இயற்கையில் ஒரு மிருகத்தின் குட்டி தன் தாயிடமிருந்து  வாழ்க்கை முழுவதற்கும் தேவையான வாழும் முறையைக் கற்றுக்கொள்கிறது . இயற்கையின் விதி அதுதான் .ஒரு தாய் மிருகம் தன் குட்டியிடம் காட்டும் அக்கறை அக்குட்டித்  தானாகத் தனித்து வாழ நம்பிக்கை பெற்று தாயை விட்டுப் பிரிந்து செல்லும்வரை தொடர்கின்றது. பிள்ளைகளை வளர்க்கும் போது தவறு செய்து  விட்டு அவர்கள் வாழும் போது வருத்தப்பட்டுக் கொள்வதால் எந்தப் பயனும் விளைவதில்லை. 
வழிகாட்டல் என்பது குழந்தை தனக்கென  ஒரு குறிக்கோளை உருவாக்கிக் கொள்வதற்கும் , அதை நிறைவேற்ற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் , அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள உதவுவதும் ஆகும்  

No comments:

Post a Comment