Monday, April 8, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி - 28

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி  
வாழ்க்கையைத் தனித்துப் போராட இளமையில் திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியாமாகும்.  கல்வி  கற்றல் மட்டுமின்றி  தொழில் ,கலை. விளையாட்டு போன்றவற்றில்  மேற்கொள்ளும் பயிற்சியும் திறமைகளை வளப்படுத்தும் . இன்றைக்கு  ஒருவனுடைய முன்னேற்றத்திற்கு சமுதாயம் முழுமையான ஒத்துழைப்பு நல்குவதை விட , அதிகமாக இடையூறுகளையே ஏற்படுத்துகின்றது . முன்னேற்றத்தடைகளை தடுத்துக்கொள்ளவும் ஒருவர் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டியது தவிர்க்க  இயலாததாக இருக்கின்றது. இந்த இடைநிலையில் தான் ஒருவருடைய மதியும் விதியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கின்றன . ஆக்கப்பூர்வமான நல்ல திறமைகள்  மதி என்றால் அழிவுப் பூர்வமான தீய திறமைகள் மதியின்மையால் வரும் விதி எனலாம் . இவற்றை இனமறிந்து தவிர்த்துக் கொள்ளும் அறிவு மதியாகும். மதியற்றோர் இறுதிவரை விதி வழிச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை . மதி வலிமையானதாக இருந்தால் விதியை வெல்லும் நம்பிக்கையை ப் பெறலாம் . தீய திறமைகளால் ஒருவர் சுயமுன்னேற்றம் பெறலாம் .இந்த சுய முன்னேற்றத்தை சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் அடைய நினைக்கும் போது அந்தச் சமுதாயம் முற்றிலும் அழிந்து போய்விடுவதற்கான வழியில் அடியெடுத்து வைக்கின்றது .தவறான வழிகளில்  பெற்ற முன்னேற்றம் ஒருநாளும் நிலையானதாக இருப்பதில்லை . விழித்துக் கொண்ட நல்லோரால் தூண்டப்படும் சமுதாயப் போராட்டத்தில்  அவை காணாமல் கூட போய்விடலாம் .  பிறருக்கு நம்மால் சமுதாயத்துக்குக்  கிடைக்கும் சமுதாயப் பாதுகாப்பு  உண்மையானதாகவும்  நம்பிக்கையளிக்கக் கூடியதாகவும் இருக்குமானால் நமக்கு சமுதாயத்தால் கிடைக்கும் பாதுகாப்பும் அப்படியே இருக்கும் .
 மாணவர்களுடைய கல்வி எதிர்காலத்தில் ஒரு சமச்சீரான சமுதாயத்தை   ஏற்படுவதற்குத் துணைநிற்கவேண்டும் சமச் சீரான சமுதாயம் அந்தச் சமுதாயத்தில் இருக்கும் அனைவருக்கும்  பாதுகாப்பாக இருப்பதோடு ஒருவர் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதோடு இடையூறுகளைத் தருவதுமில்லை  .   

No comments:

Post a Comment